பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்டவன் கருணை ! அஞ்சு வயதினில் இங்கர்சால்-ஓர் அல்லிக் குளத்தின் அருகிலே பிஞ்சு மலர்க்கரம் வீசியே தந்தை பின்பு மகிழ்வுடன் சென்றனன், கொஞ்சு மொழிபல கூறிஞன்-தேனைக் கொட்டிப் புதுக்கதை பேசினன். அஞ்சி உளம்கடுங் காமலே -அவன் ஆயிரம் கேள்விகள் வீசின்ை. ஓடைக் குளிர்புனல் பொய்கையும் -அதன் ஒரத்தில் பன்னிறப் பூக்களும் பாடும் பறவை யினங்களும்-ஒளி பாய்ச்சிடும் செம்பொற் பரிதியும் காடும் உயர்ந்த மலைகளும் - அங்குக் காட்சி விருந்துகள் வைத்தன ; வேடிக்கை பார்த்தனர் தந்தையும்-கை வீசி நடந்த சிறுவனும். பனித்துளிகள்