பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஞ்சுகற் பனைகளை அழகாய் வளர்த்து பஞ்சகா வியங்கள் , செம்பஞ்சு மேடைகள். மாசாத்து வான்மகன் மடிமீது மீட்டிய பேசாத யாழ்கள் ; பின்னும் அன்னங்கள் குதித்தா மரைகள் கொஞ்சும் அஞ்சுகங்கள் மிதித்துக் கிளம்பும் மேடைப்புல் லரிப்புகள். நடிப்பு நாயகங்கள் நடக்கும் சிக்தனைகள். அடித்துப் பறக்கும் ஆடற் சிறகுகள். காட்டிய அரங்கில் நம்பியர் உயிர்களைப் போட்டுக் குலுக்கும் புதுக்கிலு கிலுப்பைகள். இசைதவ ருத இருகடுக் கங்கள் : வசைபல பெற்று வாள்வாய் நோக்கிப் புகார்ச்செவ் வேளைப் போக்கிய அடிகளே ! பனித்துளிகள்