பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரமூர்த்தி சு மிக வரலாறு 279

வரையின் மடமகள் கேள்வன் வானவர் தானவர்க்

கெல்லாம் அரையன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும்

ஆள்வரோ கேளிர். என வரும் திருப்பதிகத்தைப் பாடிக்கொண்டு திருக் கோயில் வாயிலே அணுகினர். சிவனடியார்கள் வீற் றிருக்கும் சிறப்புடைய தேவாசிரிய மண்டபத்தைக் கைகூப்பித் தெ ழுதார். புற்றிடங்கொண்ட பெரு மான் எழுந்தருளிய திருமூலட்டானத்தைச் சூழ்ந்த திரும எளிகை வாயிலே இறைஞ்சி உள்ளே புகுந்தார். செந்தாமரைமலரில் வீற்றிருக்கும் திருமகளார் மலர் து வி வழிபாடுசெய்யத் திருவருள் புரிந்த பூங்கோயில் அமர்ந்த பெருமான் சேவடிகளே உளங்குளிர இறைஞ்சி யதலுைளதாகிய இன்ப வெள்ளத்திலே மூழ்கி நிறுை இன்னிசைத் தமிழ்மாலேயினைப் பாடிப் போற்றினர்.

அப்பொழுது யாவரும் கேட்கும்படி நம்பியா ரூரனே தோழமையாக உனக்கு நம்மைத் தந்தனம். நீ எம்மால் தடுத்தாட்கொள்ளப் பெற்ற அந்நாளில் நீ கொண்ட திருமணக்கோலத்தையே எப்பொழுதும் மேற்கொண்டு இந்நிலவுலகில் இன் புற்று வாழ்வா யாக எ ன் ற ேத ர் அருள் வாக்கு வானிடையே தோன்றியது. அவ்வருள் மொழியைச் செவிமடுத்த சுந்தரர், அடியேனே த் தடுத்தாட்கொள்ள வந்த மறையவனே, ஆரூரமர்ந்த அருமணியே, நாயினும் கடையயை எளியேனையும் பொருளாகக் கொண்டு நின்திருவடித் தாமரையினேத் தந்தருளியது, நின் பெருங்கருணைத்திறமல்லவா’ என்று கூறிப் புற்றிடங் கொண்ட பெருமானேப் பலமுறையும் வணங்கிப் போற்றினர். வீதிவிடங்கப் பெருமாளுகிய தியாகேசர் திருமுன்புசென்று தொழுது திருமாளிகையை வலஞ் செய்து போந்தார். அன்றுமுதல் அடியார்களெல்லாம் அவரைத் தம்பிரான் தோழர் என அன்பினுல்