பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/466

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 449

வேத மந்திரங்களேப் போன்று இறைவனைப் போற்றும் மறைமொழிகளாய மந்திரங்களாய் அமைந்தமையால், பொருளமைதி பற்றி இருக்கு" என்ற பெயரும், இரு சீரடியாகிய குறளடிகளால் இயன்றமையால், யாப்ப மைதிபற்றிக் குறள் என்ற பெயரும் பெறத்தக்கன வாதலின், இவ்விரு பெயர்களும் ஒருங்கியையப் பெற்றுத் திரு இருக்குக் குறள்’ என வழங்கப் பெறுவன வாயின.

இனி எழுத்தின் மாத்திரையே யன்றி அவற்றின் வன்மை, மென்மை, இடைமையாகிய ஒசையமைதி யினேக் குறிக்கும் முறையில் தத்த, தந்த தய்ய என முறையே வல்லொற்று, மெல்லொற்று, இடையொற்றுப் பெற்று இவ்வாறு மூவேறு வாய்பாடுகளாக வழங்கும் வண்ணச் சொற்களும் உள. வண்ணப் பாடல்களில் வழங்கும் தத்த, தந்த, தய்ய என்னும் இவை மூன்றும் சந்தப்பாக்களில் வரும் தான’ என்பதும் ஒரே மாத் திரையளவினவாம். ஒரு குரு நின்ற இடத்தில் இரண்டு லகு நிற்றலும் சந்தப் பாடல்களுக்குப் பொருந்தும். அஃதாவது தான’ என்னும் சந்தக் குழிப்பு ஒரே வழி 'தனன’ என வருதலும் சந்தசப்பாவுக்கு ஏற்கும் என்பதாம்.

மேற்காட்டிய சந்த விகற்பங்களுக்கும் வண்ண விகற்பங்களுக்கும் ஏற்ற சந்தக் குழிப்பு வாய்பாடுகள் பல தேவார காலத்திற்கு முன்பிருந்தே வழங்கி வந்துள்ளன.

‘தென்ன வென்று வரிவண்டிசைசெய் திருவாஞ்சியம் 2-7-1

தென்னென வண்டினங்கள் செறியார் பொழில் 1-106.10 'தென்னென இசைமுரல் சரிதையர்’ 3 - 85 – 3 'தெத்தென இசை முரல் சரிதையர்’ 3 - 85 .. 3 'தும்பி தெத்தே யெனமுரல’ 2 – 72 - 5

எனவரும் திருஞான சம்பந்தர் தேவாரத் தொடர்களும்