பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/543

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

526

பன்னிரு திருமுறை வரலாறு


ணுள்ள பற்றற்ருர் சேர்’ என்னும் முதற் குறிப்புடைய பழம்பஞ்சுரப் பதிகத்தினை ஒத்துள்ளமை காணலாம். பழம்பஞ்சுரத்தின் ஏழு பதிகங்களும் மேற்கூறிய வண் ணம் ஐந்து யாப்புவிற்பங்கள் பெற்றன. மிகுந்த பழம்பஞ்சுரத்துக் கேறும் வகை இரண்டாக்கி எனத் திருமுறைகண்டபுராணம் கூறுதலே ஆழ்ந்து நோக்குங் கால், வாகீசர் அருந்தமிழில் பழம்பஞ் சுரப் பதிகம்பெற்ற கட்டளே ஒன்றேடு மேலும் இரண்டு கட்டளே பெறுவன சுந்தரர் பாடிய பழம்பஞ்சுரப் பதிகங்கள் என்பதும், எனவே அவை பெற்ற மொத்தக் கட்டளைகள் மூன் றென்பதும் நன்கு புலகுைம் மேற்குறித்த ஐந்து யாப்பு விகற்பங்களுள் 1, 2, 3-ஆம் யாப்பு விகற்பங்கள் சீர் வகையால் வேறுபடினும் ஒசையொப்புமை நோக்கி ஒரு கட்டளையாகவும், 4-ஆம் யாப்பு விகற்பம் ஒரு கட்டளேயாகவும், 5-ஆம் யாப்பு ஒரு கட்டளேயாகவும் கொள்ளத்தக்கனவாகும்.

இனி, 54 முதல் 70 வரையுள்ள பதிகங்கள் தக் கே சிப் பண்ணுக்கு உரியன.

அழுக்கு மெய்கொடுன் திருவடி யடைந்தேன்

அதுவும் நான்படப் பாலதொன் ருனல் தனன தானன தானன தனன

தனன தானன தானன தான.

என்ருங்கு மாச்சீரும் விளச்சீரும் விரவி எண்சீரடியாக வருதல் இத்திருப்பதிகங்களின் கட்டண்யடியாகும். "தனன' தான ஆதலும், தானன தனதன ஆதலும், “தனகு தான ஆதலும், தான தன ைஆதலும் அமையும். 54 முதல் 70 வரையுள்ள தக்கே சிப் பண்ணமைந்த திருப்பதிகங்கள் யாவும் ஒரே யாப்பின வாய் ஒரே கட்டளையின் அடங்குதலால், தக்கேசிப் பேரிசையாருக்கி"என வரும் திருமுறைகண்ட புராணத் தொடர், தக்கேசிப் பேரிசையொன்ருக்கி என்று