பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/589

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

572

பன்னிரு திருமுறை வரலாறு


' குன் ருக் குறிலேந்துங் கோடா நெடிலேந்து

நின்ருர்ந்த மந்நகரந் தவ்வொடு-நன்ருக

நீளத்தால் ஏழும் நிதானத்தால் நின்றியங்க

ஆளத்தி யாமென்றறி’ எனவும் சிலப்பதிகாரம் அரங்கேற்றுகாதை யுரையில் மேற்கோளாக வரும் வெண்பாக்கள் ஆளத்தியின் இயல்பினே நன்கு புலப்படுத்தல் காணலாம். இசை பினே த் தோற்றுவித்துத் தொழில் செய்யும் முறையாகிய இவ் ஆளத்தியினே ஆலாபனை என வழங்குவர் இக் காலத்தார்.

இசைச் சுருதியினத் தோற்றுவித்தற்கு மகரமெய் துணையாகப் பயன்படும் முறையினை மகரத்தின் ஒற்ருற். சுருதி விரவும்" என்ற தொடரால் நன்குணரலாம். இம் முறை தேவார ஆசிரியர்கள் காலத்திலும் வழக்கில் இருந்ததென்பது, "மும்மென்றிசை முரல் வண்டுகள்” (1-11-3) என வரும் ஆளுடைய பிள்ளையார் திருப் பாடற் ருெடரால் நன்கு விளங்கும். இத்தொடரில் மும்ம்’ என்று மகரவொற்ருல் இசை முரலும் முறை இனிது விளக்கப்பெற்றிருத்தல் காணலாம்.

இசை, பண் என்பன காரணப் பெயர்கள் : பல இயற்பாக்களோடு நிறத்தை (இராகத்தை) இசைத்த லால் இசையென்று பெயராயிற்று. பாக்களோடு இயைத்துரைக்கப்பட்ட இசையினே நெஞ்சு, மிடறு, நா, மூக்கு, அண்ணம், உதடு, பல், தலே என்னும் எட்டிடங்களிலும், எடுத்தல், படுத்தல், நளிதல், கம்பிதம், குடிலம், ஒலி, உருட்டு, தாக்கு என்னும் எண் வகைத் தொழில்களால் சீர்பெறப் பண்ணிப் பாடப்பெறுவது பண் எனப்படும்.

  • பாவோ டணதல் இசையென் ருர்; பண்ணென்ருர்

மேவார் பெருந்தானம் எட்டானும்-பாவாய் எடுத்தல் முதலா இருநான்கும் பண்ணிப் படுத்தமையாற் பண்ணென்று பார்”