பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/591

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

574

பன்னிரு திருமுறை வரலாறு


எ ன மெலிவு நான்கும், சமன் ஏழும், வலிவு மூன்றும் ஆக அமைந்திருந்தன. இவ்வாறு சமன்தானத்தில் 'குரல் முதலாக ஏழிசைகளும் அமைந்து நிற்பது குரற். கிரமம் எனப்படும். சமன் தானத்தில் இளி முதலாக நிற்பது இளிக்கிரமம் எனவும், காந்தாரம் முதலாக நிற்பது தாரக்கிரமம் எனவும் வழங்கப்படும்.

முற்குறித்த ஏழிசைகளுள் தாரம்’ என்னும் இசையே இசை வளர்ச்சிக்கு ஆதாரமாய் முதற் கண் விளங்கியது என்பர். தாரம்' என்ற இசை ஆண் மக்கள் குரலிலும், குரல்’ என்ற இசை மகளிர் குரலிலும் இயல்பாகப் புலப்படும் என்பர். தாரத்தின் வழி யிசையாக உழையும், உழையின் வழியிசையாகக் குரலும், குரலின் வழியிசையாக இளியும், இளியின் வழியிசையாகத் துத்தமும், துத்தத்தின் வழியிசை யா விளரியும், விளரியின் வழியிசையாகக் கைக் கிளே யும் தோன்றும். இப்பிறப்புமுறை.

'தாரத்துட் டோன்றும் உழை, உழை யுட்டேசன்றும்

ஒருங் குரல், குரலு னுட்டோன்றிச்-சேருமிளி யுட்டோன்றுத் துத்தத்துட் டோன்றும் விளரியுட் கைக்கிளே தோன்றும் பிறப்பு’’ என்ற பாடலில் தெளிவாகக் குறிக்கப்பட்டது. இசைத் தோற்ற முறையாகிய இதனைக் கூர்ந்து நோக்குங்கால் ஐந்தாம் நரம்பின் அடைவுமுறையிலே ஏழிசையும் பிறப்பன என்பதும் இவ்வமைப்பில் சட்சத்தோடு இயல்பாகவே தோன்றுவது பஞ்சமம் என்பதும் நன்கு விளங்கும். தின்ற நரம்பிற்கு ஐந்தாம் நரம்பு கிளே நர பு எனப்படும். நான்காம் நரம்பினே நட்பு’ என்றும் மூன்றும் ஆரும் நரம்புகளேப் பகை' என்றும், இரண் டாம் ஏழாம் நரம்புகளே இனே' என்றும் கூறுவர்.

முற்குறித்த ஏழிசைகளும் மெலிவு, சமன், வலிவு என்னும் மூவகைத் தானங்களிலும் நின்று மூவகை