பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/602

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 585

(73) இந்தளம் (81) பியந்தை (76) காந்தாரபஞ்சமம் (82) சீகாமரம் (80) கென்சிகம் (98) சாதாரி

என் பனவாம்.

மேற்குறித்த இருபத்து மூன்று ப ண் க ளு ம் தேவாரத் திருப்பதிகங்களில் தேவார ஆசிரியர் களாலேயே இசையமைத்துப் பாடப்பெற்ற தனிச் சிறப்புடையன. மேலும், தேவாரத் திருப்பாடல் களில் 1. பாலேயாழ், 6. செந்து, 9. மருதம் 13. முல்லேயாழ்-செவ்வழி, 25. பஞ்சமம் 33. காந் தாரம், 45. பஞ்சுரம், 53. மருள், 61 குறிஞ்சி, 70. கொல்லி, 82. காமரம் ன் பன வும், நேரிசை, நந்திசை, பிறழ் என்பனவும் பண் ணின் பெயர்களாகக் குறிக்கப்பெற்றுள்ளன. இவற்றுள் பிற்கூறிய மூன்றும் நூற்று மூன்று பண்களேக் குறிக்கும் பெயர் வரிசையிற் காணப்படவில்லே, ஏனேயவை நூற்று மூன்று என்னும் பகுப்பில் அடங்கியனவே. இக்குறிப்புக்களேக் கூர்ந்து நோக்குங்கால், நூற்று மூன்று என வழங்கும் பண்கள் தேவார ஆசிரியர் காலத்திற்கு முற்பட்ட தொன்மை யுடையன என்பது நன்கு புலம்ை.

ஏழு சுரங்களால் ஆகிய இராகங்களேப் பண் என்றும், ஆறு சுரங்களால் ஆகியவற்றைப் பண் னியல் என்றும், ஐந்து சுரங்களால் ஆகியவற்றைத் திறம் என்றும், நான்கு சுரங்களால் ஆகியவற்றைத் திறத்திறம் என்றும் வழங்குதல் மரபு. இவற்றை முறையே சம்பூரணம், ஷாடவம், ஒளடவம், சதுர்த்தம் என வடமொழிப் பெயரால் வழங்குதலும் உண்டு. திறம் என்ற சொல் பெரும்பண் நீங்கலாக ஏனேய பண்ணியற்

1. 1–108–10, 2-81–5, 5–12–19, 5–45–4. 6, 1–101–2, i–114–11, 2-51–11, 2–82–9. 9. 6-35–8. 13, 1–63–7, 1–132–7, 5–12–10. 25.4–29–3. 33. 1–130-6, 6–9–2, 45. 3-14-3, 3-104-4, 53. 1-46–1, 1–66–8, 3–71–7.

61. 1.12.10, 70, 4-49-6. 82, t-47-3. நேரிசை 1-75-3, 2-53.10. நந்திசை 1-104-6. பிறழ் 4-8-5.