588
பன்னிரு திருமுறை வரலாறு
என்ற தொடர், ஒவ்வொரு பண்ணும் மூவகைத்தானக் தும் பல துறைகளிலும் இசைக்கப்பெறும் என்ற நுட் பத்தை இனிது விளக்குதல் காணலாம்.
மேலே குறித்தவண்ணம் ஒவ்வொரு பண்னேயும் இருபத்தொரு இசைத் துறைகளிற் பாடிமுடிக்கும் இசைமுறை ஆளுடையபிள்ளையார் காலத்திலும் வழக் கில் இருந்தது. இவ்விசைத் துறைகளேயெல்லாம் இசைத்துக்காட்டத் தக்கவாறு திருஞானசம்பந்தர் பாடியருளிய இயலிசைத் திருப்பதிகங்கள் அமைந் திருந்தன. இச்செய்தி,
கஞ்சத்தே னு,ண்டிட்டே களித்துவண்டு சண்பகக்
கானே தேனே போராருங் கழுமல நகரிறையைத் தஞ்சைச் சார் சண்பைக்கோன் சமைத்த நற்கலேத்துறை
தாமே போல்வார் தேனேரார் தமிழ் விரகன
மொழிகள்
எஞ்சத்தேய் வின்றிக்கே யிமைத்திசைத்
தமைத்தகொண்
டேழே பேழே நாலேமூன் றியலிசை யிசை
யியல்பா
வஞ்சத் தேய் வின் றிக்கே மனங்கொளப் பயிற்றுவோர்
மார்பே சேர்வாள் வானேர் சீர் மதிதுதல் மடவரலே. (1–126–11) எனவரும் திருக்கடைக்காப்பால் இனிது விளங்கும்.
தேவாரத் திருப்பதிகங்களில் அமைந்த பண்களேத் திஜனவேறுபாடுபற்றியும், அகம் - புறம் - அருகு பெருகு என்னும் சாதி வேறுபாடு பற்றியும் வகுத்து நிறுத்திப் பின்பு அவ்வப் பண்களின் உள் நின்ற சுவை யிது வெனக் குறித்துத் திருமுறை யெண்ணும் பதிகவெண் னும் தந்து, திருநேரிசை, திருவிருத்தம், திருக்குறுந் தொகை, திருத்தாண்டகம், யாழ்முரி எ ன் னு ம் இவற்றை அடுத்து வைத்துப் பின்வருமாறு அட்ட வனப் படுத்திக் காட்டுவர் யாழ் நூலாசிரியர்.