பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/612

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் ప్రీః న్ర

திருவாவடுதுறையாதீன ஏட்டுச் சுவடியில் உள தென மேலே காட்டிய பண்ண டைவிலே, வேங்கடமகி இயற்றிய சதுர் தண்டிப் பிரகாசிகையிலே காணப்படு வனவும் பிற்காலத்தில் வழக்கொழிந்தனவுமாகிய இராகங்கள் சில குறிக்கப்பெற்றுள்ளன. இதிற்குறித்த "இச்சிச்சி என்பது, ஹெஜ்ஜாஜ்ஜி என்ற இராகத்தை யும், நெளித பஞ்சமி’ என்பது லளித பஞ்சமித்தையும் குறிப்பன. எழுபத்திரண்டு மேளகர்த்தா ராகங்களே வகுத்துக் காட்டியவர் வேங்கடமகி. அவர் தந்தையார் கோவிந்த தீட்சிதர். அவர் தஞ்சையில் கி. பி. 1572 முதல் 1614 வரை ஆட்சிபுரிந்த அச்சு தப்ப நாயக்க ருக்கு அமைச்சராயிருந்தவர். அவருடைய புதல்வர் வேங்கடமகி காலத்திற்குப் பின் தோன்றிய இப் பண்ணடைவு ஏறக்குறைய முந்நூருண்டுகள் தொன் மையுடையதெனக் கொள்ளலாம். இப்பண்ணடை வினேக் குறித்த திருவாவடுதுறையாதீன ஏட்டுப் பிரதி யில் "கொல்லம் 917-ஞ்ஸ் துன் முகி-u மாசிமீ ச.வ. எழுதி முடிந்தது” என எழுதப் பெற்றிருத்தல் இதனே வலியுறுத்தும்.

இனி, மேலே குறித்த முறையிலன் றிச் சில பண் களே வெவ்வேறு இராகங்களிற் பாடும் மரபொன்றும் தேவார ஒதுவார்களிடையே நிலவி வந்துளது. புற நீர்மையைப் பூபாளத்திலும், காந்தாரம், பியந்தைக் காந்தாரம், கொல்லி, கொல்லிக் கெளவாணம் என்ற பண்களே நவரோசிலும்,இந் தளம் திருக்குறுந்தொகைப் பதிகங்களே நாதநாமக்கிரியையிலும், நட்டபாடையை நாட்டையிலும், தக்க ராகத்தைக் காம்போதியிலும், குறிஞ்சியை அரிகாம்போதி எதுகுல காம்போதி கலப்பிலும், அந்தாளிக்குறிஞ்சியைச் சாமா ராகத்தி லும், திருத்தாண்டகத்தை அரிகாம்போதியிலும் பாடும் வழக்கம் நிலைபெற்றிருத்தலே ஒதுவார் பலரும்