பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/627

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

610

பன்னிரு திருமுறை வரலாறு


பஞ்சமம் முதலாகிய சுத்த ஷட்ஜா என்னும் மூர்ச்சனையானது நடபைரவி மேளமாகும். பஞ்சமம் ஆதார சுருதியாக நிற்க, பஞ்சமம் சதுசுருதிதைவதம், கைசிகி நிஷாதம், ஷட்ஜம், சதுசுருதி ரிஷபம், சாதாரண காந்தாரம், சுத்த மத்திமம், பஞ்சமம் என எடுக்க நடபைரவி மேளமாகும். இந்நிரலில் தைவத ரிஷபங்களே நீக்குதல், ‘சரிகமபத நிச என்னும் நிரலில் ரிஷப பஞ்சமங்களே நீக்குதலாகும். யாழ்நூ லார் கொண்ட குறியீட்டின்படி "தர்த என்னும் இராகத்தின் உருவம் கமதந’ என்பதாகும். சதுர் தண்டிப் பிரகா சிகை அதுபந்தத்தில் 20-ஆம் மேளத்தின் கீழே "பஞ்சம ரிஷப வர்ஜிதமும், ஆகவே ஒளடுவமும், ஷட்ஜக்ரஹத்தோடு கூடியதுமான ஹிந்தோளம் என்பது அறிஞர்களால் எல்லாக்காலத்திலும் பாடப் படுவதாம்” எனக் கூறப்படுதலின், நட்ட ராகமானது இக்காலத்தில் தென்குட்டில் இந்தோளம்’ என்ற பெய ருடன் வழங்கும் இராகத்திற்கு ஒப்பானது என்பர் யாழ் நூலாசிரியர். பிற்காலத்தார் நட்டராகப் பதிகங் களேப் பந்துவராளியிற் பாடி வருகின்றனர்.

64. வியாழக் குறிஞ்சி

இது, குறிஞ்சிப் பெரும்பண்ணில் அரற்று : என்னுந் திறத்தின் பெருகியலாய்ப் பண் வரிசையில் 64 என்னும் எண் பெற்றது. இப்பண் முதல் திரு முறையில் 104 முதல் 128 வரையுள்ள பதிகங்களிற் பொருந்தியுளது. இதன் பழைய இசையுருவம் இது வெனப் புலப்படவில்லே. பிற்காலத்தார் வியாழக் குறிஞ்சிப் பதிகங்களேச் செளராஷ்டிரம் எ ன் ற இராகத்திற் பாடிவருகின்றனர்.

65. செந்துருத்தி (செந்திறம்) குறிஞ்சிப் பெரும்பண்ணில் செந்திறம் என்னுந் திறத்தின் அகநிலையாய்ப் பண்வரிசையில் 55 என்னும்