தேவாரப் பதிகங்களின் தொகை 45
மொழித்தேவனுகிய இ வ் ேவ ந் த ர் பெ ரு மா னே ப் போன்று ஐம்பதின்மர் என்ற பெருந்தொகையில் ஒதுவார்களே நியமித்துத் திருக்கோயில்களில் நாளும்
இன்னிசையால் திருமுறைத் தமிழைப் பரவச்செய்ய
அவர்கள் திட்டம் வகுத்ததாகத் தெரியவில்லை. தேவா
ரத் திருமுறைகளேத் தேடி வகைப்படுத் தித் தந்த நம்பி
யாண்டார் நம்பியின் திருமுறைவகுப்பின உளத்துட் கொண்டு இயலிசை வல்லார் பலரும் ஒருங்கு கூடிப்
பண்பொருந்தப் பாடி இறைவனே வழிபடுதற்குரிய வழி
துறைகளே முதன்முதல் வகுத்துத்தந்த பெருமை
முதலாம் இராசராசசோழனுக்கே யுரியதாகும். இவ் வேந்தர் பெருமான் செய்த இத் திருமுறைத் தொண்
டினே யுளத்துட்கொண்டே சேய திருமுறை கண்ட
ராசராச தேவர் ” எனச் சேக்கிழார் புராணமுடையார்
இம் மன்னனேச் சிறப்பித்துப் போற்றியுள்ளார் எனக்
கொள்ளுதல் பொருத்தமுடையதாகும்.
தேவாரப் பதிகங்களின் தொகை
திருஞானசம்பந்தர் பாடிய திருப்பதிகங்கள் பதின ருயிரமெனவும், திருநாவுக்க ரசர் பாடிய திருப்பதி கங்கள் நாற்பத்தொன் பதினுயிரமெனவும் சுந்தரர் பாடிய திருப்பதிகங்கள் முப்பத்தெண்ணுயிர மெனவும் திருமுறைகண்ட புராணம் கூறுவதாகக் கருதுவர் சிலர்.
- இணேகொ ளே ழெழு நூறிரும் பனுவல் ஈன்றவன் திருநாவினுக் கரையன்'
எனவரும் தொடரால் சுந்தரமூர்த்தி சுவாமிகளே திரு நாவுக்கரசர் பாடிய திருப்பதிகங்களின் தொகை யினைக் குறிப்பிட்டுப் போற்றியுள்ளார்.