பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/638

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 台爱蜜

வேய்ங்குழலுதுதலிற் சிறந்த பயிற்சியுடையோர் முல்லே நிலமக்களாய ஆயராவர். குழல் வாசிப்பதில் ஆயர்களுக்கு அமைந்திருந்த இசை நலங்குறித்து ஆளுடைய பிள்ளையார் திருப்பதிகத்திற் காணப்படும் நிகழ்ச்சியொன்று இங்கு நினைக்கத் தகுவதாகும். அன்பினுல் நினைப்போர்க்கு வீடு பேறளிக்கும் பெருமை வாய்ந்த திருவண்ணுமலேச் சாரலில் ஆயளுெருவன் ஆநிரைகளேயும் எருமையினங்களேயும் மேய்க் குந் தொழிலில் ஈடுபட்டுள்ளான். மாலேப்பொழுதாகவே அவற்றையெல்லாம் ஒன்று திரட்டி அழைத்துச் செல் லும் கடமை அவனுக்கேற்பட்டது. ஒளி மங்கிய அந் தி நேரத்தில் புதர்களிடையே சென்று புல்மேயும் எருமை யொன்றை அவன் காணவில்லே. எனினும் இடை யிடையே அவ்வெருமையின் கனேப்பொவி மட்டும் அவன் செவியிற் படுகிறது. அவ்வொலியினே க் கேட்ட ஆயன் , தன் கையிலிருந்த வேய்ங்குழலே எடுத்து ஊதி இனிய இசையைத் தோற்றுவித்தான். அவ்வின்னிசை யினுல் ஈர்க்கப்பட்டு அச்சாரலில் மேயும் எருமை முதலிய எல்லா மாடுகளும் ஒன்றுசேர்ந்து அவனே யடைகின்றன. உள்ளத்திற்கு உவகையளிக்கும் இவ் வினிய காட்சியை, 'எஇனத்தோ ரூழியடியார் ஏத்த இமையோர் பெருமானுர் நினேத்துத் தொழுவார் பாவந்தீர்க்கும் நிமலர் உறைகோயில் கனேத்தமேதி காணு தாயன் கை மேற் குழலூத அனேத் துஞ் சென்று திரளுஞ் சாரல் அண்ணு மலேயாரே' என வரும் திருப்பாடலில் ஆளுடைய பிள்ளேயார் வனப் புற எடுத்துக்காட்டிய திறம் உணர்ந்து மகிழத்தக்க தாகும். இதல்ை விலங்குகளில் மந்த மதியுடைய தெனப்படும் எருமையையும் தம்பால் ஈர்த்து நிறுத் தும் முறையில் முல்ல நிலத்தில் வாழும் ஆயர் வேய்ங் குழலால் இனிய இசையினே வளர்த்தார்கள் என்ற செய்தி நன்கு புலனுதல் காணலாம்.