பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/641

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

葛密率 பன்னிரு தீருமுறை வரச ஈறு

பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய சங்கச் செய்யுட்களில் தமிழ் முன்னுேர் இசைத்த பழைய யாழ்க்கருவியின் உருவச்சாயலும் அதன் உறுப்புக் களாகிய பத்தர், போர்வைத் தோல், கோடு, ஆணி, திவவு, நரம்பின் தொடர்ச்சி, உந்தி, கவைக்கடை என்பவற்றின் அமைப்பும் வினே, பயன், மெய், உரு என்னும் நால்வகை உவமங்களின் துணை கொண்டு நன்கு விளக்கப்பெற்றுள்ளன. ண் ைட நா ரி ல் வழங்கிய நரப்புக் கருவியாகிய யாழ் என்பது, மருப்பு என்னும் கோடாகிய உறுப்பு வளேயப்பெற்றதாய்க் கண்ணினுற் காண்டற்கு அத்துனே அழகில்லாத தோற்றத்துடன் செவியாற்கேட்டு மகிழ்தற்கு இனிய இ ைசநலங்களேத் தோற்றுவிக்கும் சிறப்புடையதாய் விளங்கியது. இந் நுட்பம்.

' கணே கொடிதி யாழ்கோடு செவ்விதாங் கன்ன

வினே படு பாலா ற் கொளல் ’’ (279) என வரும் திருக்குறளுக்கு, " அம்பு வடிவாற் செவ்வி தாயினும் செயலாற்கொடிது. ய | ழ் கோட்டால் வளேந்ததாயினும் செயலாற் செவ்விது. அவ்வகையே தவஞ் செய்வோரையும் கொடியர், செவ்விபர் என்பது வடிவாற் கொள்ளாது அவர் செயல்பட்ட கூற்ருனே அறிந்துகொள்க’ என்ப் பரிமேலழகர் கூறிய உரை யாலும்,

' யாழிடைப் பிறவா இசையேயென்கோ (மனேயறம்-76)

என வரும் சிலப்பதிகாரத் தொடர்க்கு " யாழ் கட்கு (கண்ணுக்கு) இன் தைாகலின் அதனிடைப் பிறவாத இசையே யென்பேனே என அடியார்க்கு நல்லார் கூறிய உரையாலும் நன்கு தெளியப்படும்.

செங்கோட்டியாழின அடியொற்றியமைந்தது, வீணே யென்னும் இசைக்கருவியாகும், யாழில் நரம்பு கட்டப் பெறுதற்கு இடமாயுள்ள கோடு என்னும்