762
பன்னிரு திருமுறை வரலாறு
என அப்பர் அடிகளும்,
கையார் வளைக் காடுகாளோடும் உடனுய் (7-82-51 என நம்பியாரூரரும் இறைவனே ப் போற்றியுள்ளார்கள். நக்கீரர் பழையோள் எனக் குறித்த பெயரையே அப்பர் அடிகள் தொல்லேயவள் என்ற சொல்லால் குறித்துள்ளமை இங்கு நோக்கத் தக்க தாம்.
பொருநராற்றுப் படையில் பாடினியைக் குறிக்கு மிடத்து,
ஈர்க்கிடையோகா ஏரிளவனமுலே " f86]
என அவளது எழில்நலம் சிறப்பிக்கப் பெற்றுள்ளது
இடையீர் போகா இளமுலேயானே ஒர்
புடையீரே ’ [1-54-2 |
என வரும் சம்பந்தர் தேவாரத்தில் இத்தொடர் எடுத் தாளப் படுதலே க் காணலாம்.
செருந்திப்பூ பொன் போலும் நிறமுடையது என்ப தனே,
தலே நாட் செருந்தி தமனிய மருட்டவும் ?
(சிறுபாண். 147)
என வரும் தொடரில் நத்தத் தளுர் குறித்துள்ளார்.
- பொருந்துதண் புறவினிற் கொன்றைபொன்
சொரித ரத் துன்று பைம்பூஞ்
செருந்தி செம்பொன் மலர் திருநெல்வேலியுறை
செல்வர் தாமே? [8-91-1]
எனச் சம்பந்தரும்,
செருந்தி செம்பொன் மலருந் திருநாகேச்சரத்தானே' I7-99–2]