சங்கநூற் குறிப்புக்கள் 767
- வெஞ்சொற் பேசும் வேடர் மடவார். இதன மது வேறி
அஞ்சொற் கிளிகள் ஆயோனெனனும்
அண்மைலையாரே (சம்பந்தர்} * டிையார் தடங்கண்ணுள் மடமொழியான புனங்காக்கச் செவ்வேதிரிந் தாயோவெனப் போகாவிட விளிந்து கைபாவிய கவனன் மணி யெறிய விரிந்தோடிச் செவ்வாயின கிளிபாடிடுஞ் சீயர்ப்பத மலேயே
(7–79-4)
என வரும் திருப்பாடல்களில் இக்குறிப்பு அமைந்திருந் தல் காணலாம்.
வேறு பல்லுருவிற் கடவுட்பேனி (குறிஞ்சிப்பாட்டு-6) என்ற தொடர், கடவுள் ஆகிய முழு முதற் பொருள் ஒன்றே பல்வேறு உருவில் வழிப்படப்பெறும் நிலையை
விளக்குவது.
- நாளுவித உருவாய் நமை ஆள்வான் ’ (1-9-5)
என்பது சம்பந்தர் தேவாரம்.
வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலேத்தலேய கடற் காவிரி (5–6)
எனக் காவிரியைப் போற்றினர் கடியலூர் உருத்திரங் கண்ணனர். அக்காவிரி வளஞ் சுரக்கும் பொன்னி நாட்டில் அமைந்த கழுமல நகரினே
விலங்கலமர் புயல் மறந்து மீன்சனிபுக்
கூன்சலிக்குங் காலந்தானும்
கலங்கலிலா மனப்பெருவண் கையுடைய
- مر
மெய்யவர் வாழ்கழுமலமே (1 - 129 3)
எனச் சிறப்பித்தார் ஆளுடைய பிள்ளேயார்.