768
பன்னிரு திருமுறை வரலாறு
மதிசேர்ந்த மகவெண் மீன் உருகெழுதிறல் உயர் கோட்டத்து முருகமர்பூ முரண் கிடக்கை வரியணிசுடர் வான் பொய்கை’
(பட்டினப்பாலே 35.38)
என்ற தொடரில் நிறைமதியும் மீனும் பொய்கைக்கும் கரைக்கும் உவமையாகக் குறிப்பிடப்பட்டன. இவ்வுவ மையை அடியொற்றிப் பிறைமதியை ஏ ரி யி ன் கரைக்கு உவமையாக நாவுக்கரசர் எடுத்தாண் டுள்ளார்.
- வாரிவளாய வருபுனற் கங்கை சடைமறைவாய்
எரிவளாவிக் கிடந்தது போலும் இளம்பிறையே
(4-118-9)
என்பது திருவிருத்தம்.
பேரிசை நவிரமே ஏயுறையுங் காரியுண்டிக் கடவுள்' (82-83)
எனச் சிவபெருமானே மலைபடு கடாம் என்ற சங்கப் பாட்டு, பரவிப் போற்றியுள்ளது.
ஒருங்களி நீ இறைவா என்று உம்பர்கள்
ஒலமிடக்கண்டு இருங்களமார விடத்தை இன்னமுது உண்ணிய ஈசர்’
(1-48-4)
என்ருங்குவரும் தேவாரப் பாடல்களில் இறைவன் நஞ்சுண்ட திறம் விரித்துரைக்கப் பெற்றுள்ளது.
குரங்குகளின் இனமாகிய கருவிரலூகம், மூங்கில் வளர்ந்த மலேச்சாரலில் விளையாடும் இயல்பு,
‘கவனுமிழ் கடுங்கல் இருவெதிரீர்ங் கழை தத்திக் கல்எனக் கருவிரலுகம் பார்ப்போடு இரிய (206-8)