770
பன்னிரு திருமுறை வரலாறு
என ஞானசம்பந்தப்பிள்ளையார் கூறிய வருணனேப் பகுதி நினைக்கத்தக்கதாகும்.
- தினத்தாளன்ன சிறு பசுங்கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும் குருகு (குறுந்தொகை-25)
எனச் சங்கச் செய்யுளில் நாரையின் இயல்பு கூறப் பெற்றது.
நாரைகள் ஆரல் வாரி வயல் மேதி வைகும் (2.84-1) எனவும்,
தி&னத்தானன்ன செங்கால் நாரை சேருத்திருவாரூர் ’
(7–95-8)
எனவும் வரும் தேவாரத் தொடர்கள், மேற்குறித்த நாரையின் இயல்பினே விணக்குதல் கா ைலாம்.
நெய்தல் நிலத்தில் வளர்ந்துள்ள தாழை, குரு கினே ஒத்துப் பூக்கும் இயல்பினே,
- தயங்குதிகர பொருத தாழைவெண்பூக்
மூருகென மலரும் [226]
என வரும் குறுந்தொகைப் பாடலால் அறியலாம். இவ் வுவமையை அடியொற்றி அமைந்தன.
" விடமுண்ட மிடற் றண்ணல் வெண்காட்டின் தண்புற வின்
மடல்விண்ட மூடத்தாழை மலர்நிழல்க் குருகென்று தடமண்டு துறைக்கெண்டை தாமரையின் பூ மறையக் கடல்விண்ட கதிர் முத்தம் நகை காட்டும் காட்சியதே
[2–48-4]
எனவும்,
நெய்தற்குருகு தன்பின்ளே என்றெண்ணி நெருங்கிச்
சென்று கைதை மடல் புல்கு தென் கழிப்பாலே " (4-106-1)