திருக்குறளும் தேவாரத்திருமுறையும் 843
- ஒள்ளி துள்ளக் கதிக்கா மிவனுெளி
வெள்ளியானுறை வேற்காடு உள்ளியார் உயர்ந்தாரில் வுலகினில் தெள்ளியாரவர் தேவரே' [1–57-1}
என வும்,
- முள்ளின் மேல் முதுகூகை முரலுஞ் சோலே
வெள்ளின்மேல் விடுகூறைக் கொடிவிளேந்த கள்ளில் மேய அண்ணல் கழல் நாளும் உள்ளுமேல் உயர் வெய்தல் ஒருதலையே ’ [1-119-1}
எனவும் வரும் திருப்பாடல்களாகும். ஆளுடைய பிள்ளை யார் அருளிய இப்பாடல்கள் உள்ளுவதெல் லாம் உயர்வுள்ளல் ? என்னும் திருக்குறட்கு விளக்க மாக அமைந்தனவாகும்.
சோம்புதலில்லாத மன்னவன், தன் அடியளவால் உலக முழுவதையும் அளந்த திருமால் தாண்டிக்கடந்த நிலப்பரப்பு முழுவதனையும் ஒருங்கே எய்தும் ஆற்றலேப் பெறுவான் என்பார்,
- மடியிலா மன்னவன் எய்தும், அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு” [610 |
என்ருர் திருவள்ளுவர். திருமால், மாவலி என்னும் வேந்தனிடத்தே மூன்றடி மண் இரந்து வேண்டி நெடி யோனுய் நின்று இவ்வுலக முழுவதனையும் தன் திருப் பாதத்து ஒரடியால் தாவி அளந்தமை பற்றி அப் பெருமானத் தாவியவன்' (1-62-6) என்ற பெயராற் குறித்தார் ஞானசம்பந்தர். திருமால் தன் பாதத்தால் தாவியளந்த இந் நிகழ்ச்சியை,
- மூவுலகும் ஈரடியான் முறை நிரம்பா வகைமுடியத்
தாவிய சேவடி ’ சிலப்.ஆய்ச்சியர் குரவை)
என்ற தொடரில் இளங்கோவடிகள் குறித்துள்ளார்.