இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
திருச்சிற்றம்பலக்கோவை 27%
பொருளையேயன்றித் தலைவன் தலைவியொழுகலாருகிய இப் பொருளையன்ரும்.
இத்திருக்கோவைக்கண் இறைவன் இயல்புகளை விரித் துரைத்துப் போற்றுவனவாக அமைந்த தொடர்கள் யாவும் அறிவனுாற்பொருள் பற்றியனவாகவும், தலைவன், தலைவி, தோழி முதலியோர் இயல்புரைப்பனவாக அமைந்த தொடர் கள் யாவும் உலகநூற்பொருள்பற்றியனவாகவும் பகுத்து உணர்தல் இத்திருக்கோவையின் பொருளையுணர்ந்து மகிழ் தற்கு மிகவும் துணைசெய்வதாகும்.