பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் சிவநெறிக்கொள்கை 333

பெயராப் பேரின்ப நிலையில் இருத்தல்வேண்டும் என்பதே யாகும்.

இறைவனருளால் மாயை கன்மங்களின் உதவியினைப் பெற்றுச் சிறிது சிறிதாக அறியாமை தேய்ந்து அம் முறையே அறிவு விளங்கப் பெற்ற உயிர்கள், தமக்குத் தோன் ருத் துணையாய் நின்று அருள் புரியும் உண்மையறி வின்ப வுருவினனுகிய சிவபரம் பொருளை அடைந்து அம் முதல்வனருளில் இரண்டறக் கலந்து ஒன்ருதலிலேயே தமது நாட்டத்தைச் செலுத்தி, உலகியற் பொருள்களிலும் தம்மைச் சூழ்ந்துள்ள உற்ருர் உறவினர் முதலியோரிடத்தி லும் தம் உடம்பிலும் உயிராகிய தம்மிலும் செல்லும் உணர்வை மடித்துத் திருப்பித் தம் உயிருணர்வுக்கு உணர் வாய் விளங்கும் சிவ பரம்பொருளிலே படியுமாறு செய்து, தாம் ஒரு பொருள் உண்டென்பதனை மறந்து சிவமாகவே அமர்ந்திருப்பன என்பர் பெரியோர். இவ்வாறு உயிர்கள் மும்மலப் பிணிப்பினின்றும் நீங்கிச் செம்பொருளாகிய சிவத்தைத் தலைக்கூடிச் சிவமெனத் தாமென வேறின்றி இரண்டறக் கலத்தலையே திருவாதவூரடிகள் சிவமாதல் ' எனக் குறித்துள்ளார். ஆகவே மலம் மாயை என்னும் பாசங்களும், அவற்ருேடு உடய்ை நிற்றல்பற்றிப் பசுவென வழங்கப்படும் உயிர்களும், இவை எல்லாவற்றையும் ஊடுருவி யாண்டும் நிறைந்து நின்றே ஒன்றினும் தோய் வற விளங்கும் பதியாகிய சிவமும் என இம்மூன்றும் என்றும் உள்பொருள்களேயாம் என்பதும், உயிர்கள் மலமாயை கன்மங்களின் பிணிப்பினின்றும் விடுபட்டுச் சிவத்தைத் தலைக்கூடுதல் என்பது, மும்மலங்களாற் கட்டுப்பட்டு அல்லற்படும் முன்னைய நிலையினின்றும் பெயர்ந்து என்றும் பேராவியற்கையாகிய பெருநிலையைப் பெற்றுப் பேரின்ப வுருவாய் நிற்கும் அவ்வளவே யல்லது, அவ்வுயிர்கள் தம் பொருண்மை கெட்டு ஒன்றுமேயில்லாத வெறும்பாழா யொழிதல் அன்று என்பதும், சைவ சித்தாந்தத்தின் தெளிந்த கொள்கைகளாகும்.

திருவாதவூரடிகள் அருளிய திருவாசகப் பனுவலில் சைவ சித்தாந்த நுண்பொருள்கள் ஆங்காங்கே தெளிவாக விளக்கப் பெற்றிருத்தல் காணலாம். உயிர்களின் அகத்தே அறிவை மறைத்து நிற்கும் மலமும் புறத்தே அவ்வுயிர் களின் கட்புலனை மறைத்து நிற்கும் இருளும் ஆணவ மலத்