§
7
7
ஒன்பதாந் திருமுறை
- புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி
யறிவழிந்திட் டைமேலுந்தி அலமந்தபோதாக அஞ்சேலென் றருள் செய்வான்
அமருங்கோயில் '
என வரும் திருஞானசம்பந்தர் திருப்பாடற்பொருளை அடியொற்றி யமைந்திருத்தல் காண்க.
பூத்திரளுருவஞ் செங்கதிர் விரியாப்
புந்தியில் வந்தமால் விடையோன் துரத்திரட் பளிங்கிற்ருேன்றிய தோற்றம்
தோன்ற நின்றவன் '
எனக் கருவூர்த்தேவர் இறைவனது தெய்வக்காட்சியை விளக்கும் பகுதி,
' இன்றெனக்கருளி யிருள்கடிந்துள்ளத்
தெழுகின்ற ஞாயிறேபோன்று நின்ற நின்றன்மை நினைப்பற நினைந்தேன். '
என்ற திருவாசகத் தொடரையும்,
பளிங்கேபோல் அரிவைபாகம் ஒத்தாறு சமயங்கட் கொருதலைவன் '
எனவரும் திருஞானசம்பந்தர் தேவாரத் தொடரையும்
நினைவுபடுத்துகின்றது.
களந்தையென்பது தஞ்சை ஜில்லா திருத்துறைப் பூண்டி தாலுகாவிலுள்ள களப்பாள் என்ற ஊராகும். களப்பாள் களந்தையென மருவிற்று. இவ்வூரிலுள்ள கோயில்களுள் அழகியநாதசுவாமி திருக்கோயில் முதலாம் ஆதித்த சோழனுற் கட்டப்பெற்றமையால் ஆதித்தீச்சுரம் என வழங்கப்பெறுகின்றது. இச்செய்தி ' களப்பாள் உடையார் திருவாதித்தீசுரமுடையார் ' என இக் கோயிலிற் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுத் தொடரால் உறுதியாதல் தெளியப்படும். கருவூர்த்தேவர் பாடிய கலைகள் தம்பொருளும் என்ற முதற்குறிப்புடைய திருவிசைப்பாப்பதிகம் களப்பாள் என்ற ஊரிலுள்ள இவ்வழகியநாதசுவாமி கோயிலைப்பற்றிப் பாடப்பெற்ற தென்றே கொள்ளுதல் வேண் டும் . இதன்கண்
1. தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதி Y141 எண் 262.