பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

440

பன்னிரு திருமுறை வரலாறு


பிறவியாகிய துன்பத்தினின்றும் நீங்கி வீடுபெறுகலே அறிவுடைய மக்களின் கடமையும் செயலுமாகும், அந்நிலை சிவனை யடைந்தாலன்றிக் கைகூடாது. சிவன் ஒருவனே எல்லார்க்கு ந் தலைவன். சிவனுே.ொக்கும் தெய்வம் தேடினும் இல்லை. அவன் மூவர்க்கும் முதல்வன். தாயினும் நல்லன். தேவர் முதலிய யாவரும் அவனைத் தொழுவ தல்லது அவளுல் தொழப்படுவார் ஒருவருமிலர். இடியும் முழக்கமும் ஈசன் உருவம். அயன் அரி அரன் ஆகிய மூவரும் ஆராய்ந்து நோக்குங்கால் இறைவனது அருளா கிய தொடர்ச்சியால் ஒருவரேயாவர். சிவனருளல்லது வேறு தெய்வமில்லை. சிவபெருமான் உயிர்கள் மேல் வைத்த பெருங்கருணையால் மன்னுயிர் கள் பாசப் பிணிப் பினின்றும் நீங்கி வீடுபே றடைதற் பொருட்டு வேத சிவா கமங்களை அருளிச் செய்துள்ளார். அவற்றின் வழியொழுகிப் பிறவிப்பெருங்கடல் நீந்தி வீடு பெறுதற்கு வேண்டிய நற் செயல்களே அறிவுடைய நன்மக்களால் மேற்கொள்ளத் தக்கன. சிவபெருமான் ஆகமப் பொருளை நந்திபெரு மானுக்கு உபதேசித்தருளினர். அவர் கயிலையில் சனற் குமாரர் முதலிய நால்வர்க்கும் பதஞ்சலி வியாக்கிரர் ஆகிய முனிவர்களுக்கும் அவ்வழியே எனக்கும் உபதேசித்தருளி ஞர். ஆகமப்பொருளைத் தமிழில் சொல்லும் பொருட்டே என்னை இம்மூலனுடம் பிலிருக்குமாறு இறைவர் பணித்தரு ளினர். அவருடைய அருளால் யான் மூல னுடம் பிற்புகுந்து திருவாவடுதுறையிற் பல்லாண்டுகள் சிவயோகத் தமர்ந் திருந்தேன். அரனடி நாள்தோறும் சிந்தை செய்து ஆகமம் செப்பலுற்றேன். இறைவன் ஆடியருளும் திருக் கூத்தின் சிறப்பினை அறிவுறுத்தும் மறை நூலாகிய இதனைச் செப்புதற் பொருட்டே யான் இங்கு வந்தேன். நான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுவதாகுக. யான் கூறிய ஞானம் மிக்க இம்மந்திரங்களை உளம் பொருந்திக் கேட்டுணர்வோர் இறைவனுடைய திருவடிகளில் தலைப் பெய்து இன்புறுவர் ' என இப்பாயிரப் பகுதியில் திருமூலர் அறிவுறுத்தி யருள்கின்றர்.

இந்நூலிலுள்ள ஒன்பது தந்திரங்களுள் முதல் நான் கும் சிவஞானத்தைப் பெறுதற்கு விரும்பியவர் தம்மை உள்ளும் புறம்பும் தகுதியுடையவராக்கிக் கொள்ளுதற்குரிய சாதனங்களையும், நடுவணதாகிய ஐந்தாந் தந்திரம் சைவத்