பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/994

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

978

பன்னிரு திருமுறை வரலாறு


அளவுப்படி விமானமும் சிகரமும் அமைத்து அதன்மேல் தூபியும் நட்டனர். சுதைவேலையை முடித்து அக்கோயிலி னுள்ளே கிணறு திருக்குளம் மதில்முதலாக எல்லாம் வகுத்தமைத்து இவ்வாறு தம்மனத்தில் உருவாகிய திருக் கோயிலினுள்ளே சிவபெருமானை எழுந்தருளச் செய்வதற் கேற்ற நல்லநாளும் வேளையும் நிச்சயித்தனர்.

இவரது திருப்பணி இவ்வாறு நிகழ்ந்து கொண்டிருக் கும் நிலையில், காடவர்கோளுகிய வேந்தர்பெருமான் காஞ்சி நகரத்திலே இறைவனுக்குத் திருக்கற்றளி அமைத்துத் தன் பெரும்பொருள்முழுவதும் அத்திருக்கோயிற் பூசனைக் கென்று வகுத்துத் தான் அமைத்த கற்றளியிலே சிவபெரு மானை எழுந்தருளுவித்தற்குப் பூசலார் மனத்தில் வகுத்த அந்த நாளையே குறித்தனன். பூசலாரது அன்பின் திறத்தை உலகத்தார்க்கு அறிவிக்கத் திருவுளங் கொண்ட சிவபெருமான், அந்தநாளின் முதல்நாளிரவில் காடவர்கோமான் முன் கனவில் எழுந்தருளி நின்ற ஆர்ப்பூசல் அன்பன் நெடிதுநாள் நினைந்து செய்த நன்மை நீடு ஆலயத்து நாளை நாம் புகுவோம் ; நீ இங்குச் செய்யத் துணிந்த தாபனத்தை நாளையதினத்தில் வைத்துக் கொள்ளாது பின்னர் மற்ருெரு நாளிற் செய்வாயாக' என்று பணித்தருளி மறைந்தருளினர்.

பல்லவர்கோன், துயிலுணர்ந்தெழுந்து இறைவர் உளமுவக்கும் வண்ணம் பெரியதிருக்கோயிலே அமைத்த பெருந்தகையாரைச் சென்று காணவிரும்பித் திருநின்ற வூரை அடைந்தான். அங்கு அருகனைந்தவர்களை நோக்கி, பூசலார் அமைத்த கோயில் எங்கே உள்ளது ? என்று வினவினன். அதுகேட்ட நின்றவூர் மக்கள், பூசலார் இவ்வூரிற் கோயில் எதுவும் கட்டவில்லை என்றனர். மன்னன் அவ்வூர் மறையவர்களையழைத்து பூசலார் யார் . எனக் கேட்டறிந்து, ஆசில் வேதியராகிய அவர் இருக்கு மிடத்திற்குத் தானே சென்று அவரை வணங்கி, ‘தேவரீர் அமைத்த திருக்கோயில் யாது? அக்கோயிலில் சிவபெரு மானை எழுந்தருளச் செய்யும் நான் இந்த நாள் என்று இறைவர் தெரிவித்தருளத் தெரிந்து உம்மைக்கண்டு பணிதற்கு வந்தேன் என்ருன், பூசலார், அரசன் உரை கேட்டு மருண்டு, இறைவன் என்னையும் பொருளாக அருள்செய்தாராயின் அகக்கோயிலின் பெருமை எத்தகை