காஞ்சித் திருத்தலக் பயணம் 127
م
அருளாளனைக் குறிப்பதாகக் கொள்வர் வைணவப் பெரு மக்கள். ஆகவே, இப்பாசுரம் கச்சித் திருப்பதியாரால் இரட்டித்து ஒதப்பெறுகின்றது. இதனை முன்னரும் குறிப்பிட்டுள்ளேன்.
அடுத்த பாகரத்தில் எம்பெருமான்,
அண்டமும் எண்திசையும் நிலனும்
அலைநீரொடு வான் எரி கால்முதலா உண்டவன் எந்தை பிரான் (4)
என்று குறிக்கப்பெறுகின்றான். பிரளயப் பெருங்கடலில் சிக்கித் தத்தளிக்கும் இந்த உலகங்களை எல்லாம் பாலனாக இருந்து திருவமுது செய்து ஆலிலையில் அறி துயில் கொள்ளும் அண்ணலின் அகடிதகடநா சாமர்த்தி யம்’ பேசப் பெறுகின்றது. இங்ங்ணம் ஆபத்துக் காலத் தில் அனைத்தையும் தம் திருவயிற்றில் வைத்து நோக்கி, பெருமான் சம்சாரப் பெருங்கடலில் தவிக்கும் நம்மை நோக்குவான் வேண்டி பரமேச்சுர விண்ணகரத்தில் எழுந்தருளியுள்ளான் என்பது ஆழ்வார் பெறவைத்த குறிப்பாகும். ஈண்டு எம்பெருமானின் காத்தல் தொழில். பேசப் பெறுகின்றது என்பது தெளிவு.
ஆனையின் துயர்தீர்த்த அருஞ்செயலும், காளியன் நாகத்தின் கொழுப்பை அடக்கிய தீரச் செயலும் அடுத்து அநுசந்திக்கப் பெறுன்றன.
தூம்புடைத் திண்கை வன்தாள் களிற்றின் துயர்தீர்த்து அரவம்வெருவ முன் நாள் பூம்புனல் பொய்கை புக்கான் (5)
22. அகடிதகட நா சாமர்த்தியம் - சாதிக்க முடியாத வற்றையும் சாதிக்கும் திறமை (அகடித-சேர்க்க முடியாதவற்றை; கடநர்-சேர்த்து வைக்கின்ற: சாமர்த்தியம்-திறமை)