பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சித் திருத்தலப் பயணம் 135

திருக்காரகம், திருக்கார்வானம், திருநீரகம் இத்தலத்து எம்பெருமான்கள் தமக்கு உறவுடைய உலகளந்த பெரு மானின் திருமாளிகையின் புறவீடுகளில் (out houses) தங்கிக் காலம் கழிக்கின்றனர். இருந்தாலும் தனி வீடு களில் இருப்பது இவர்கட்குப் பரம திருப்தி. நிலாத் துண்டத்து எம்பெருமான் ஏகாம்பரநாதர் திருக்கோயிலி லும், திருக்கள்வனூர் எம்பெருமான் காமாட்சி அன்னை யின் திருக்கோயிலிலும் ஒண்டுக் குடித்தனமாக எழுந் தருளி, சைவர்களிடம் கைங்கரியம் பெற்றுக்கொண்டு "மறந்தும் புறந்தொழா வீரவைணவர்கட்கு முகம் காட்டாமல் சைவர் - வைணவர் என்ற வேறுபாடு காட்டாத மற்றவர்கள் அனைவருக்கும் சேவை சாதிக் கின்றனர். திருமாலை வனங்காத சில சைவர்கட்கும் காட்சி தந்து அவர்களை உய்விக்கவே இந்த சைவத்திருப் பதிகளில் எழுந்தருளியுள்ளனர் போலும்!