பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாங்கூர்த் திருத்தலப் பயணம் 3.31

யில் கட்டியிருந்த கொடிகள் விண்ணைத் தழுவி சூரியனு டைய கதிர்களை மறைத்து நிழல் செய்கின்றன (5). இள மகளிர் நடனமாடுங்கால் அவர்கள் கால்களில் அணிந் திருக்கும் தண்டைச் சிலம்பின் ஒலியும் வேறு சிலர் பந்த டிக்குங்கால் அவர்கள் கைகளில் அணிந்திருக்கும் வளை களின் ஒசையும் எம்மருங்கும் கேட்கப் பெறும் (7).

எழுந்தருளியிருக்கும் இறைவன்: இங்கு எழுந்த ருளியிருக்கும் இறைவன் பெரு வள்ளல், இவனது திரு நாமம் புருடோத்தமன் என்பது. வளளண்மை மிக்க எம் பெருமான் எழுந்தருளியிருக்கும் தலமாதலால் இத்திருத் தலமும் வண்டிருடோத்தமம் என்ற திருநாமம் பெற்றது. இந்த எம்பெருமானே பெரிய கடலில் சேது கட்டி இலங் கையை அடைந்து அந்நகரின் தலைவனான இராவணன் தலைகளை அறுத்துத் தள்ளினவன்: அவன் தம்பி வீடன. னுக்கும் முடி சூட்டியவன் (1). யமுனை நதிக்கரையில்,

பல்ல வந்திகழ் பூங்கடம் பேறிஅக் காளி யன்பன அரங்கில்

ஒல்லை வந்துறப் பாய்ந்து அரு நடஞ்செய்த

உம்பர் கோனே (2).

(பல்லவம்-தளிர்கள்; பூகடம்பு-பூத்த கடம்பு, பணம்-படம்; ஒல்லை-விரைவாக: உம்பர் கோன்-தேவாதி தேவன்;

ஈண்டு எழுந்தருளியிருப்பவன். கண்ணன் ஏறிய கடப்ப மரம் காளியன் நஞ்சாகிய நெருப்பினால் கொளுத்தப் பெற்று இலை, பூ, காய், கனி, முதலியவை ஒன்றுமின்றி மொட்டைமரமாக இருந்தாலும், கண்ணபிரான் அதன் மீது ஏறுங்கால் அவன் திருவடி பட்ட மாத்திாத்தில் 'பல்லவந்திகழ் பூங்கடம்பாக மாறிற்று என்பது ஆழ் வார் திருவுள்ளம் என்பதையும் சிந்திக்க வைக்கின்றது.