சோழநாட்டுத் திருத்தலப் பயணம் 盛翁夏
என்பது முதற் பாசுரம். இதிலும் இதனைத் தொடர்ந்து வரும் ஒன்பது பாசுரங்களிலும் எம்பெருமான் தன் பெருமைகளையெல்லாம் காட்டிக் கொடுத்தமையைப் பரக்கப் பேசி இனியராகின்றார் ஆழ்வார்.
'பரந்த கடல்போலே அளவிடமுடியாத சொரூப: சுபாவங்களையுடையவன்; செருக்குடைய காளை போல் மேனாணிப்புள்ளவன்; பெண்ணைப்போல் பாரதந்திரமே வடிவானவன்; ஆணைப்போல் சுவாதந்திரியமாயிருப் பவன்; எண்ணிறந்த யோகியருக்கு அருள் பாலிக்கும் தவப் பயனாயுள்ளவன். முத்தின் திரளாகிய மாலை போன்ற வன்; பக்தர்கட்கு உயிர் நிலையாயிருப்பவன்; முத்துக் குவியல் போன்றிருப்பவன்; அரும்புபோல் இளமையுடை யவன்; மலர்ந்த பூப்போல் யெளவன பருவமுள்ளவன்; அடியேன் மனத்தில் புதிது புதிதாக எழும் ஆசைக்கு இலக்கணமானவன்; அமுதத்தை நீராகப் பாய்ச்சியதனால் வளர்ந்த இன்சுவையுள்ள கரும்புபோல் இனிமையுடை யவன்; கனிபோல்கண்ட போதே நுகரத்தக்கவன் (1). பக்தியோகத்திற்குத் தூண்டுபவன்; பரமபதம் அளிக்க வல்ல பிரபத்தியோகத்திற்கு ஏவுபவன்; அன்பு இல்லா தார்க்குப் பொய்யன்: திருவாழியைத் திருக்கையிலுடை யவன்; கடல் நிற வண்ணன்; எல்லாரிலும் மேம்பட்ட வன்; ஆலிலையில் பள்ளிகொண்ட ஆச்சரியன்; நேற்றைப் போதில் நுகரப்பெற்ற பொருளைப்போல் நெஞ்சை விட்டகலாத யோக்கியதையையுடையவன்; இன்று அதுப விக்கப்பெறும் பொருள் போன்றவன்; மேலுள்ள காலமும் இப்படியே அநுபவிக்க உரியவன்; திங்கள், ஆண்டு இவற். றிற்கு நிர்வாக்கன்; கன்னற்கட்டி போன்றவன்; கருப்பஞ்சாறு போன்றவன் (2).
வேறு புகலற்ற அடியேன் போல்வார் திறத்தில் காரணமில்லாமல் கருணை காட்டுபவன்; சிவனைத் தன் திருமேனியில் வைத்து அதனைத் தன் பேறாக உகந்திருக்