பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் பயணம் 283

களின் வடிவமுடையாய் (6); பிரணவத்தின் பொருளாகத் திகழ்கின்றாய் (7); மங்கையர்பால் காதலைப் பெருக்கிச் சிற்றின்பத்தை நுகர்வதால் பின்னையும் வரும் துன்பத் திற்குக் காரணமான கர்மத்தை நினைந்து அஞ்சி நின்திரு வடிகளைச் சரண் அடைகின்றேன் (8); பிறப்பு-இறப்பு வட்டங்களில் உள்ள துன்பங்களை நினைந்து நின்திருவடி களை அடைந்தேன். (9); உன்னைச் சேவிப்பதாகிய ஒரு பேற்றினை எனக்கு அருள் செய்லாயேல், அடியேன் 'இருள் தருமாஞாலத்துள் இனிப் பிறவியான் வேண்டேன்’ என்று பேசுகின்றார்.

இரண்டாம் திருமொழி (6.2): இத்திருமொழியில் ஆழ்வார் தான் அநாதிகாலம் சம்சாரத்தில் உழன்றபடி யையும், மேல்வரக் கடவதான நரக யாதனையை நினைந்து அஞ்சுகின்ற படியையும் பரக்க விண்ணப்பம் செய்கின் றார். "திருவிண்ணகரத்து எம்பெருமானே, நின்னைத் துதித்தற்குரிய சொற்களைக் கொண்டு அற்பர்களைத் துதிக்கும் எண்ணமுடையவனானேன் ஐம்புலஇன்பங்களை நுகர்ந்து தீர்த்தேன்; ஓரொரு காரணத்தை முன்னிட்டுப் பிறரிடமுள்ள அன்பையும் பகையையும் வெறுத்தொழித் தேன்; உன்னைச் சரணம் அடைந்தேன். (1): நெடுங்காலம் நின்னை நினையாது மறந்தேன்; அசித்திலும் கடைகெட்ட வனானேன்; பிறப்பிறப்பு வட்டத்தில் சிக்கித் தடுமாறி னேன்; இன்று நின்திருவடிப்பேற்றிற்குத் தகுதியானேன் (2) இரண்டு விபூதிகட்கும் நாதனே, மிக்க அன்புடன் என் உள்ளத்தை இடமாகக் கொண்டு தேனைப்போல் இனிய னாயிருப்பவனே, தீண்டாவழும்பும் செந்நீரும் சீயும் நரம்பும் செறி தசையும் வேண்டாநாற்றமிகும் உடல்’ பயனற்றமை நன்கறிந்து நின்னைச் சரண் அடைந்தேன் (3); பெற்ற பிள்ளைகள் மனைவியர் முதலிய சுற்றத்தார் நான் இறக்கும் போது உதவி செய்பவரல்லர் என்பதை யறிந்து அவர்களைக் கைவிட்டேன்; நீ பார்த்தனுக்கு