சோழநாட்டுத் திருத்தலப் பயணம் 295
கழனிகளில் உள்ள அழகிய நீலமலர்கள் வண்டுகள் கூட்டம் கூட்டமாக விருந்து உண்பதற்கு தேனைப் பெருக்குகின் தன (7), காவிரி நதி ஒளியுடன் திகழும் நவமணிகளையும், மூங்கில் முத்துகளையும் சாமரங்களையும் பொன்னையும் தள்ளி வருகின்றன.
ஊர்ச் சூழ்நிலை : சிறந்த வேலைப்பாடுகளமைத்த மதில்களாலும் மாளிகைகளாலும் அழகிய மண்டபங்களி னாலும் சிறந்து காணப் பெறுகின்றது ஊர் (4). நாவில் தான்மறைகளை ஒதும் அந்தணர்கள் வாழும் இடமாகும் இவ்வூர் (5). இவ்வூரில் வாழும் அந்தணர்கள் மறைகள்ை ஒதுவதுடன் முத்தினையும் வளர்ப்பவர்கள்; இதனால் பெரும் புகழையும் பெற்றவர்கள்; பொறுமையும் வள்ளண்மையும் இவர்தம் சிறந்த பண்புகளாகும் (8).
எம்பெருமான் : எம்பெருமானின் சிறப்பு இவ்வாறு பேசப் பெறுகின்றது: 'எவருக்கும் தம் முயற்சியால் அறியக் கூடாதவன்; எல்லாவுலகங்கட்கும் நாதன்; என்னை அடிமையாகக் கொண்டவன்; வாமன மாணி உருவங்கொண்டு மாவலியின் யாக பூமியில் அழகிய நடையுடன் சென்றவன் (1): வாமன உருவத்துடன் சென்று மாவலியை வஞ்சித்து எல்லா உலகங்களையும் சுவாதீனப் படுத்திக்கொண்டவன்; கஜேந்திரனின் துன்பம் தீர்த்த புனிதன் (2): இராவணன் முடியும்படி அம்புகளைப் பிரயோகித்தவன்; குதிரை வடிவத்துடன் வந்த கேசி என்னும் அசுரனின் வாயைக் கீண்டவன்; கம்சன் நிறுத்தி வைத்திருந்த சானூரன், முஷ்டிகன் என்ற மல்லர்களை வென்றவன்; தவழ்ந்து சென்று இரட்டை மருத மரங்களை முறித்துத் தள்ளினவன்(3); கோவர்த்தன மலையால் இந்திரனின் கல் மாரியைப் பழுதாக்கினவன்; இராவணனின் இருபது தோள்களையும் அறுத்தொழித்த வல்வில்லையுடைய இராமன் (4, 7), யசோதைப் பிராட்டி கண்படாதபடி மறைத்து வைத்திருந்த தயிரை