證馨靈
பரகாலன் பைந்தமிழ்
33. திருக்கண்டியூர் : தஞ்சையாளியை விட்டுத் திருக்கண்டியூர் வருகின்றார் ஆழ்வார். ஒரே ஒரு பாசுரத் தில் மங்களா சாசனம் செய்கின்றார்.
பிண்டிஆர் மண்டை ஏந்தி
பிறர்மனை திரிதந்து உண்ணும் முண்டியான் சாபம் தீர்த்த
ஒருவன்ஊர் உலகம் ஏத்தும் கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சிபேர் மல்லை என்று மண்டினார் உய்யல் அல்லால்
மற்றையார்க்கு உய்யல் ஆமே*
|பிண்டி-உளுத்த பொடிகள்; திரிந்தது-திரிந்து;
முண்டியான் - மொட்டையாண்டி; ஒருவன் . ஒப்பற்றவன்)
என்பது பாசுரம், எம்பெருமான் இதில் உகந்தருளின
கண்டியூர் திருவரங்கம், திருமெய்யம், திருவெஃகா திருப் பேர்நகர், திருக்கடல் மல்லை ஆசிய திருப்பதிகளிலெங்கும் 'பதியே பரவித் தொழும் தொண்டர்' என்னும்படியாக மூழ்கியிருப்பவர்கள் உய்ய வழி உண்டே யல்லது அல்லாதவர்களுக்கு ஒரு நாளும் உய்ய வழி இல்லை'
என்கின்றார் ஆழ்வார்.
3. கண்டியூர் : தஞ்சை-திருவையாறு நெடுஞ்சாலை
4.
யில் அம்ைந்துள்ளது. இத்திருக்கிோயிலின்
இராச கோபுரம் மூன்று தள்ங்களால் ஆனது.
இறைவன் : தழலந்தன்; நின்ற திருக்க்ோலம்;
கிழக்கு நோக்கிய திருமுகமண்டலம். தாயார்:
கம்லவில்லி காச்சியார், திருக் குறுந், 19 மேலும்
ಶ್ಗ வேண்டுவோர் சோ.நா.தி. (1) கட்டுரை 淳”°岛。
திருக்குறுந் 19.