தென்னரங்கத்துப் பெரிய பெருமாளை அதுபவித்த ஆழ்வார் (1) திருமாலிருஞ் சோலை மலைக்கு எழுத்தரு ளுகின்றார். இன்று இஃது அழகர் கோயில் என்று வழங்கி வருகின்றது. இந்தத் தலத்து எம்பெருமானை ஆழ் வார் பல திருப்பாசுரங்களால் மங்களாசாசனம் செய் கின்றார்.
தலச் சூழ்நிலை: இத்தலச் சோலை சூழ்நிலையை 'வளங்கனி பொழில் சூழ் மாலிருஞ்சோலை' (பெரி. திரு. 2.7:7), தேனமர் பூம்பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை" (9.9:5), கினை வளர்சூழ் திருமாலிருஞ்சோலை' (9 9:2),
صمیماس مسی
1. திருமாலிருஞ்சோலை மலை: இந்தத் திவ்விய தேசம் மதுரைக்கு வடக்கே 12 கல் தொலை விலுள்ளது. பேருந்து வசதிகள் உண்டு. மூலவர்: பரமசாமி. அழகர், கல்லழகர், மாலலங்காரர் என்ற பெயர்க்ளும் உண்டு. நின்ற திருக்கோலம்; கிழக்கு நோக்கிய திருமுகமண்டலம், உற்சவர் சுத்தத் தங்கத்தால் செய்யப் பெற்றவர். த யார்: கல்யாண் சுந்தரவல்லி காச்சியார். இவர் தனிக் கோயில் தயார். பெரி. திரு. 1.8:5; 2.7.7; 9.8 (பதிகம்); 9.9 (பதிகம்) 10.1:3; 11.7:9. திரு குறுந் 3; சிறி. திருமடல் (39); பெரி. திருமடல் (62). மேலும் விவரம் வேண்டுவோர் ப்ாண்டி காட்டுத் திருப்பதிகள் 6-வது கட்டுரை காண்க.