பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/444

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394 பரகாலன் பைந்தமிழ்

மாட்டிற்றிலள். முகத்தை நேரே பார்த்து முன்னிலை யாக்கிச் சொற்கள் கூற முடியாதபடி சோதி வெள்ளம் அலையெறிந்து தள்ளுகின்றது. அதனால் அப்பெருமா னுடைய ஒப்புயர் வற்ற வடிவழகையும் திவ்விய அணிகள் இவ்விய ஆயுதங்கள் இவற்றின் பொருத்தங்களையும், சிருங்கார விலாசங்களையும், மற்றும் கண்ட அதிசயங் களையும் தன் தோழியிடம் சொல்லி வியக்கின்றாள்.'

பொன்இவர் மேனி;மரக தத்தின்

பொங்கிளஞ் சோதி அகலத்து ஆரம் மின்:இவர் வாயில் நல் வேதம் ஒதும்

வேதியர்; வானத்து ஆவர்; தோழி! என் னையும் நோக்கிஎன் அல்குல் நோக்கி

ஏந்துஇளம் கொங்கையும் நோக்கு கின்றார்; அன்னைஎன் நோக்கும்என்று அஞ்சு கின்றேன்

அச்சோ ஒருவர் அழகி யவா! (1)

(மேனி-உடல்; அகலம்-மார்பு ஆரம்-மாலை; அல்குல்-நிதம்பம்; அச்சோ - ஆச்சரியம்!

என்பது முதற் பாசுரம். தோழி! நான் பெற்ற பேறே பேறு; அந்தோ! இழந்தாயே! நீ காணப் பெற்றிலையே!” என்கின்றாள் பரகால நாயகி தோழியை நோக்கி. 'நங் காய்! என்ன அற்புதம் காணப் பெற்றாய்? விரித்துரை யாய்' என்று வினவுகின்றாள் தோழி.

நடைப்ெற்றவற்றை நவில்கின்றாள் நாயகி. திவ்வி யாத்தும சொரூபம், திவ்விய குணம் முதலானவற்றை யெல்லாம் விடடு முந்துற முன்னம் திவ்விய மங்கள விக்கி ரகத்திலே தன் நெஞ்சு பறியுண்டமை தோன்றச் சொல்லு

5. அர்ச்சை வடிவாக இருந்த ஐம்பெருமான் ஆழ்வார் நாயகிக்கு உருவெளித் தோற்றமாகக் காட்சி அளித்தான் போலும்!