பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/467

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகள் பாசுரங்கள் துாது பற்றியவை 盘及7

சேர்ப்பாரைப் பட்சிகளாக்கி ஜ்ஞான கர்மங்களைச் இறகு என்று, குரு ஸ்ப்ரஹ்மச்சாரி புத்ர சிஷ்ய ஸ்தானே பேசும் (சூத்திரம் - 150)

(ஸ்ப்ரஹ்மசாரி - ஒரு சாலை மாணாக்கர்;

ஸ்தானே - இடத்தில்)

என்று குறிப்பிடுகின்றது. விண்ணோர் பிரானார், மாசுஇல் மலரடிக் கீழ் எம்மைச் சேர்விக்கும் வண்டுகளே’ (திருவிருத். 55) என்று ஆழ்வாரே அருளிச் செய்துள்ளமை யால் பகவத் விஷயத்தில் கொண்டு சேர்க்குமவர்கள் பறவைகளாகக் கொள்ளப்பெறுவர். இறகு சிறகுகளைக் கொண்டு பறவைகட்கு எங்ங்ணம் விசும்பில் பறந்து செல்லுதல் இயலுகின்றதோ, அங்ங்ணமே ஞானம், ஒழுக்கம் (அநுட்டானம்) என்னும் இரண்டாலும் இறை வன் அடையப் பெறுகின்றான் என்பது ஆன்றோர் கொள்கை. எனவே, ஞானத்தையும், அநுட்டானத்தை யும் சிறகுகளாகக் கொள்ளல் வேண்டும். ஆசாரியர்களும் ஒரு சாலை மாணாக்கர்களும், புத்திரர்களும் இறைவனை அடையும் பேற்றுக்குத் துணையாக இருப்பார்கள் என்பது அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரின் கருத்தாகும்.

மேற்குறிப்பிட்ட பறவைகளிலும் அன்னம் வண்டு முதலியவையாகச் சொல்லப்பெறுபவர்கள் இன்னார் இன்னார் போன்றவர்கள் என்னும் உள்ளுறைப் பொரு ளும் (ஸ்வாபதேசப் பொருளும்) அருளிச் செய்யப் பெற்றுள்ளது. அவற்றை ஈண்டுக் குறிப்பிடுதல் மிகவும் பொருத்தமாகும். அன்னமாகப் பேசப்பெறுபவர்கள் செல்வநம்பி, பெரியாழ்வார், நாத முனிகள், ஆளவந்தார் ஆகியோர். நாரதமுனிவர் லோகசாரங்க முனிவரால்

1. ஆ..ஹி. 151 உரையில் விளக்கப் பெற்றுள்ளது. ப.கா.-27