ஆழ்வாரின் இறையதுபவம் 451
முடிச்சோதி யாய் உனது
முகச்சோதி மலர்ந்ததுவோ? அடிச்சோதி நீநின்ற
தாமரையாய் அலர்ந்ததுவோ? படிச்சோதி ஆடையொடும்
பல்கலனாய் நின்பைம்பொன் கடிச்சோதி கலந்ததுவோ?
திருமாலே கட்டுரையே?
(முடி-தலை; அடி-திருவடி படிச்சோதி-இயற்கை
யான காந்தி; கடி-திருவரை)
என்ற திருப்பாசுரத்தில்.
காஞ்சி திருஅட்ட புயகரத்து எம்பெருமானின் உருவ வெளிப்பாட்டு அழகில் ஈடுபட்ட திருமங்கையாழ்வார் நாயகி பாவனையில்,
மேவி யெப்பாலும் விண்ணோர்வணங்க வேதம் உரைப்பர்,முந் நீர் மடந்நை தேவி அப்பாலதிர் சங்கம்; இப்பால்
சக்கரம்; மற்றிவர் வண்ணம் எண்ணில் காவி யொப் பார்; கட லேயு மொப்பார்;
கண்ணும் வடிவும் நெடியராய் என் ஆவியொப் பார்; (2.8:8)
(விண்ணோர்-நித்திய சூரிகள்; மேவி-சூழ்ந்து கொண்டு; முந்நீர் மடந்தை-இலக்குமி, தேவிபட்டமகிஷி, வண்ணம்-நிறம்; காவி-கருநெய் தில்பூ, ஆவி-உயிர்)
என்று அநுபவித்துப் பேசுகின்றார். "என் முன்னே வந்து தோன்றின.பெரியவர் தனியராய் வந்திலர்: நித்திய சூரி
8. திருவாய்-3.1:1