தத்துவக் கருத்துகள் 495.
டமாக இருப்பவன்; தனக்கு ஒப்பாரும் மிககாரும் இல்லா தவன். ஞானம், சக்தி, பலம், ஐசுவரியம், வீரியம் தேஜஸ் முதலிய மங்கள சூனக கூட்டங்களால் அலங்கரிக் கப் பெற்றவன். அவனிடம் இக்குணங்கள் ஆதல்;அழிதல் இன்றி எப்பொழுதும் நிறைந்திருக்கும. இவற்றைத் தவிர வாத்சல்யம், செளலப்பியம், செளசீல்யம் முதலிய எண் ணற்ற குணங்களையும் கொண்டவன்".
இவ்வுலகத்தைப் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றின் காரணபூதன்.
பூவளர் உந்திதன்னுள் புவனம் படைத்து
உண்டு உமிழ்ந்த
தேவர்கள் நாயகன் (9.9:1)
உடம்புருவல் மூன்றொன்றாய் மூர்த்தி வேறாய்
உலகுய்ய நின்றானை (2.5:3)
என்பர் திருமங்கையாழ்வார். திருநெடுந் தாண்டகத்தில் ஒரு பாசுரம் இக்கருத்துகளைத் தெளிவாக விளக்கு கின்றது.
பார் உருவி நீர்எரிகால் விசும்பு மாகிப்
பலவேறு சமயமுமாய்ப் பரந்து நின்ற ஏர்உருவில் மூவருமே என்ன நின்ற
இமயவர்தம் திருவுருவே றெண்ணும்போது ஓர் உருவம் பொன்னுருவம்; ஒன்று செந்தி ஒன்றுமா கடல்உருவம்; ஒத்து நின்ற மூவுருவம் கண்டபோ தொன்றாம் சோதி
முகிலுருவம் எம்மடிகள் உருவந்தானே (2)
4. முத்திகெறி-கடிதம் 6-பக் 49 55 விவரம் காண்க,