பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. கலியன் வாழ்க்கை -

அகச்சான்றுகள்

திருமங்கையாழ்வார் பாசுரங்களிலிருந்து இவர்தம் வாழ்க்கை பற்றிய பல செய்திகள் அறியக் கிடக்கின்றன. அவற்றை ஈண்டுக் காட்டுவோம்.

இவர் ஆலி நாட்டிற்கும், திருமங்கை குறையல் என்ற திருப்பதிகட்கும் தலைவர்.

கூர்அணிந்த வேல்வலவன் ஆலி நாடன்

கொடி மாட மங்கையர்கோன் குறையல் ஆளி.

(4.4:10) மங்கை வேந்தன் (1.3:10) ஆலி நாடன் (7.3:10) புலமங்கைக் குலவேந்தன் (6.6:10) வயலாளி நன்னாடன்

மங்கையர் தலைவன் (9. 8:10)

என்ற பெரிய திருமொழிப் பாசுரப் பகுதிகளால் இதை அறியலாம்.

இவருக்குக் கலிகன்றி முதலிய பல திருநாமங்கள்

உண்டு.