கலியன் வாழ்க்கை - அகச்சான்றுகள் 3互
பிரிந்தேன் பெற்றமக்கள் பெண்டிர் என்று
இவர் பின் உதவாது அறிந்தேன். (6.2:4)
தேசம் அறிய உமக்கே
ஆளாய்த் திரிகின்றேமுக்கு (4. 9:4) நறையூர் நம்பிக்கு என்றும் தொண்டாய்க் கலியன்
ஒலிசெய் தமிழ்மாலை (7.1:10)
என்ற பாசுரப்பகுதிகளால் இவற்றை அறியலாம்.
இவர் திருமால் அடிமையில் சிறந்து விளங்கியவர் என்பதையும் மறந்தும் புறந்தொழா மாண்புடையாளர் என்பதையும் இவரது திருவாக்கினைக் கொண்டே தெளியலாம்.
பேரருளாளன் பெருமை பேசக் கற்றவன் (9.5:10)
தேசம் அறிய உமக்கே
ஆளாய்த் திரிகின் றோமுக்கு (4. 9:4) வேம்பின் புழு வேம்பு அன்றி
உண்ணாது அடியேன் நான்பின்னும் உன்சேவடி
அன்றி. நயவேன் (11. 8:7) மற்று ஒர் தெய்வம் எண்ணேன்;
உன்னை என் மனத்து வைத்துப் பெற்றேன் பெற்றதும் பிறவாமை (6.3:5) கூறேன் நெஞ்சுதன்னால்
குணங்கொண்டு மற்றோர் தெய்வம் தேறேன் உன்னையல்லால்
திருவிண் ணகரானே! (6.3:7)
என்ற பாசுரப் பகுதிகளில் இவற்றைக் காணலாம்.