பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 பரிபாடல் மூலமும் உரையும் நிறங்களுடன் திகழும்: அவை, பெருமானின் அருளைப்போலத் தம்மை அடைந்தார்க்கு உதவி ஆதரிப்பன. மொக்குகளோடுங் கூடிய வேங்கை மரங்கள், ஒளிகொண்ட செந்நிறப் பூக்களைக் கொண்டு விளங்கும்; அவை பகைவர்க்கு அச்சத்தையும் அடியவர்க்கு அருளையும் தரும் பெருமானைப்போல விளங்கும். இவ்வாறு திருமாலிருஞ் சோலை மலையிடத்துள்ள அனைத்துமே மாயோனாகிய அவனோடும் ஒப்புடையவாகவே விளங்குவதைக் காணலாம். இதனால், அனைவருமே குன்றிடத் துச் சென்று அவனைப் போற்றிப் பயன் பெறுவீர்களாக! அங்ங்ணம், குன்றிடத்துச் சென்று தொழுதற்கு இயலாத மக்களே! உங்கட்கும் ஒன்ற சொல்வோம்! அவனது குன்றத்தின் தோற்றத்தைத் தொலைவிலிருந்தேனும் கண்டு, அவனை நினைந்து, அதனைப் பணிவீர்களாக! திருமாலிருங் குன்றம் என்னும் புகழ் உலகெங்கும் பரவி யுள்ளது. பெரிதான ஆரவாரத்தைக் கொண்ட கடலாற் - குழப்பெற்ற இவ்வுலகத்து மிகப்பழமையாக வரும் புகழை உடையதும் அதுவாகும். தன் தோற்றத்து அளவாலேயே தன்னைக் கண்டாரது மயக்கமாகிய பிணியைப் போக்கும் வழிபடு கடவுளைப் போன்றதும் அம்மலையாகும். . குட்டியைத் தழுவிய மந்திகள் மலைக்குமலை பாய்ந்து கொண்டிருக்கும். மொட்டுக்களோடுங் கூடிய முல்லை தன் மலர்ச்சியாகிய நிறைவைக் காட்டியபடி விளங்கும். நன்னீர்ச் சுனைகளின் நீரானது நீலமணியைப்போல நிறங்கொண்டு விளங்கும். அவ்விடத்தே விளங்கம் இளைய மயில்கள் கிளைகள் தோறும் இருந்தபடி அகவிக் கொண்டிருக்கும். குருக்கத்தி, இலை உதிரப்பெற்றதாய் விளங்கும். குயிலினங்கள் கூவிக் கொண்டிருக்கும். சொல்லப்படும் குழலும் பாண்டிலும் சேர்ந்து ஒலிக்க, அது பாடுவார் நாவினாற் பாடுகின்ற பாடலும், அதற்குரிய தாளமாக அமைந்த முழவொலியும் சேர்ந்து ஒலிப்பதுபோலத் தோற்றும். பகைவரைப் போரிட்டழித்து வெற்றி கொண்டோனாகிய திரு 07೧! நிறமிக்க குன்றல்லவா! அதனால், அக்குன்றத்தில் எழுகின்ற ஒலிகளும், அவற்றுக்கு எதிராக எழும் இசைபோன்ற எதிரொலி களும் எப்போதும் ஒய்வின்றி எழுந்துகொண்டேயிருக்கும். சொற்பொருள் : நீலம் நீலப் பூ செயலை அசோகம்: செந்நிறப் பூக்களும் ஆம். உறழ பல்வேறு நிறத்தவாய் விளங்க நனை - மொக்கு பெயர் பரந்தது - பெயர் உலகெங்கும் பரவியது. கலி - ஆரவாரம் தொன்றியல் - பழையாக வரும்தன்மை. மயர் - மயல், மயக்கம். காமக் கடவுள்-விரும்பும் கடவுள்; வழிபடுகடவுள். - முகிழ் - மொக்கு முறை முறைமை முறைப்பட மலரும் தன்மை.