பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Lుui&&తLCEమGui (D 163 உரைப்பன. வேள்வி அந்தணரால் முறையாக வேட்கப்படுவது ஆவி அவிப்பலி, முதல் நீண்டது. வாய்வாய் இடந்தோறும் eமேலாக இமைபு இறப்ப இமைப்பராகி அகன்று செல்ல தேயா மண்டிலம் - கதிர் மண்டிலம்: தேய்ந்தும் வளர்ந்தும் விளங்குவது நிலவு மண்டிலம். . . . வண்டினம் ஊதா! - வளைமுன்கை வணங்கிறையார் - அணைமென்தோள் அசைபுஒத்தார் - தார்மார்பின் தகையியலார் . . . . , 35 ஈராமாலை இயல்அணியார் - , , மனமகிழ் துங்குநர் பாய்புடன் ஆடச் சுனைமலர்த் தாதுதும் வண்டுதல் எய்தா அனைய பரங்குன்றின் அணி! - - முன்னங் கைகளிடத்தே வளைகளை உடையவரும், வளைந்த சந்தினை உடைவருமான பெண்களின், மூங்கிலை யொத்த மென்மையான தோள்களின் அசைவிற்கு ஒத்தபடி ஆடினர். அவரை விரும்பிய அவர் காதலரான இளைஞர்கள். மார்பிடத்துத் தாரினையும், தகையமைந்த இயலினையும் உடையவரான அவர், ஈரமாலையுடனே விளங்கும்.அழகிய அணிகளையணிந்த மகளிருடனே கூடி, மனத்தே மகிழ்ச்சி நிறைந்தவராயினர். அதனால், தாமும் அம் மகளிருடன் சுனைகளிற் பாய்ந்து நீராடினர். இவர்கள் பாய்ந்தாடிய ஆரவாரத்திற்கு அஞ்சிச், சுனைகளிலுள்ள மலர்களிடத்தே மொய்த்துத் தேனூதும் வண்டுகளும், தாம் ஊதுதற்கு விரும் பாவாய்ச் சுனைகளை அடையாதிருந்தன. திருப்பரங் குன்றத்தின் அழகு அப்படிப் பட்டதாகும். - சொற்பொருள் : முன்கை - முன்னங்கை இறை சந்து அணை-மூங்கில்தார். ஆடவர் மார்பில் அணியும் மாலை.மகிழ் - மகிழ்ச்சி அணி அழகு. - தடுமாற்றம் நன்று கீழோர், வயல்பரக்கும் வார்வெள்ளருவி பரந்தானாதரோ 40 மேலோர், இயங்குதலால் வீழ்மணி நீலம் செறுவுழக்குமரோ தெய்வ விழவும் திருந்து விருந்தயர்வும் அவ்வெள் ளருவி அணிபரங் குன்றிற்கும் தொய்யா விழுச்சீர் வளங்கெழு வையைக்கும் - - கொய்யுளை மான்தேர்க் கொடித்தேரான் கூடற்கும் 45 கையூழ் தடுமாற்றம் நன்று: .