புலியூர்க்கேசிகன் ★ അഖണ്ഡ (7) - 75 பேணா தொருத்தி பேதுற, ஆயிடை என்னை வருவ தெனக்கென் றினையா நன்ளுெமர் மார்பன் நடுக்குற, நண்ணிச் சிகைகிடந்த ஊடலிற் செங்கண் சேப்பூர, 7Ο வக்ை தொடர்ந்த ஆடலுள் நல்லவர் தம்முள், - பகை தொடர்ந்து, கோதை பரியூஉ, நனிவெகுண்டு யாறாடு மேனி அணிகண்ட தன்னன்பன் சேறாடு மேனி திருநிலத் துய்ப்பச் சிரமிதித்துத் தீர்வில தாகச் செருவுற்றாள்! செம்புனல் 75 ஊருடன் ஆடும் கடை - அவளுடைய கண்களின் அந்தச் சிவந்த இயல்பினைக் கண்ட அவள் தலைவன் அவளைப் புகழ்ந்தான். அவளுடைய அழகிய நோக்கினைப் பாட்டிலே அமைத்துப் பலவாறாகப் பாடினான். அப் பாட்டுக்களைத் தலைவியைக் குறித்ததெனத் தெளியாத மற்றொருத்தி, தன்னைக் குறித்ததென கருதியவளாக மயங்கினாள். அவ்விடத்தே, எனக்கு என்ன துன்பம் வருவதாகு மோ? என்று வருந்தினான் தலைவன். நன்றாகப் பரந்த மார்பின னான அவன் நடுக்கங் கொண்டான். தன் காதலியை நெருங்கிச் சென்றான். - -- - - - - தன் காதலனை மற்றொருத்தி காதலுடன் நோக்கியதைக் கண்டாள் அவள். மதுப்போதையாற் சிவந்திருந்த அவள் கண்கள், ஊடற்சினத்தால் மேலும் சிவப்பேறின. முறையோடு நிகழ்ந்துகொண்டிருந்த நீர்விளையாட்டுள் கலந்துகொண்ட பெண்கள் கூட்டத்துள், தன் தலைவனைக் காதலித்து நோக்கிய அவள்மீது பகை கொண்டாள். தன் கோதையை அறுத்துப், பெரிதும் வெகுண்டவள்ாக, அவன்மீது மோதினாள். அவள் சினங்கொண்டதைக் கண்ட அவன், சந்தனச்சேறு பூசிய தன் திருமேனி அழகிய நிலத்திடத்தே பொருந்துமாறு பணிந்து, அவளை வேண்டியவனாக இரந்த்ான். அவளோ, அவன் தலைமீது தன் பாதத்தால் உதைத்தாள். அவன் பணிந்தும் தீர்வில்லாததான பெரும்பகையை அவள் மேற்கொண்டாள். இவையெல்லாம் செம்புனலிடத்தே ஊரவருடன் கூடி ர. - காலத்து நிகழ்ந்தனவே யாம். / . சொற்பொருள் : கண்ணியல் - கண்ணின் அழகு. காரிகை நீர் அழகுத்தன்மை. பண் பாட்டு பண்ணமைந்தது. பேணாது - அது தன்னைக் குறித்ததன்றென்று தெளிந்து அறியாது. சிகை - குறை. பரியூஉ - அறுத்து. சேறு - சந்தனக் குழம்பு. - - -