பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84. - , பரிபாடல் ឃ្វាលប្រយ៉ាយយំ - "வெற்றி கொள்ளும்போர்வெம்மை கொண்டோனாகிய முருகப்பிரான் ஊர்கின்ற மயிலதும், வேலதும் நிழலைத் தரையிடத்துக் கண்டு, அவற்றைத் தொட்டும் ஆணையிடாதிருப் பாயாக. அறிவோர் அடிதொட்டுச் சூளுரைப்பினும், அவர் அதனைப் பொய்த்தாலும் நின்னைப் பொறுப்பார்; ஆனால் அவையோ பொய்ச்சூளைப் பொறுக்கவே மாட்டா. “குறவன் மகளான வள்ளி நாய்ச்சியாரின்மீது ஆணையிட்டு உரைத்தலை ஒருபோதும் செய்யாதிருப்பாயாக அவள் காதல் ஒழுக்கத்தை மறவாது பேணுபவள்; எம்மைக் கருணையோடு காப்பவள்! - - - ஐயனே!. இனிச் சூளுரைப்பதாயின், வாய்மையாளர் அடிதொட்டுப் போற்றும் பரங்குன்றத்தோடு, வையைக்குத் தகுந்த மணலாகிய சிறப்பைத்தருகின்ற அதனோடும் சாற்றிச் குளுரைக்கா திருப்பாயாக. - - சொற்பொருள் : பாணி காலம் சூள் ஆணை. சான்றாளர் - சான்றாண்மை உடையவர். கேளிர் உறவினர். கெழுவு - அன்பு. அணங்கு வருத்தும் தேவப்பெண். விறல் - வெற்றி ஊர்மயில் - ஊரும் மயில், - r விளக்கம் : சான்றாளர் பெற்ற் மகனாயிருந்தும் நீ தகுதி யற்றவே செய்வாய் ஆயினை என்பவள், தாஅகத்தகாஅ மகாஅன் என்றனள். தகுதியற்ற செயலாவது, தலைவியை மறந்து சேரிக்கண் உறவாடுதலும் அதனை மறுத்துப் பொய்ச் சூள் உரைத்தலும். 'அரியளோ? என்றது, தாய்க்குத் தாங்கற்கு அரியளல்லள் ஆயினும், பொய்ச்சூளால் நீ துன்புற்று நலிய, இவளும் நின் பொருட்டு நலிந்து உயிர் விடுவாளே எனத் தலைவியின் காதற்பாசத்து மிகுதியை உரைத்ததாம். கேளிர் மணலின்’ என்றது, அதுதான் பவை புனைந்து ஆடிய காலத்தெல்லாம் உறவோடு விளங்கியமையால். 'அன்பு அளிதோ’ என்றது, அதுதான் மெய்யன்பாக விளங்காமை யான் என்று குறைகூறியதாம். அறவர் - சான்றோர். குறவன் மகள் - வள்ளி. அறவர் சான்றோர். குறவன் மகள் வள்ளி.அறவர் பொறுப்பர் குறவன் மகள் பொறாள் என்பதாம். அடிசேர்ந்து சொல்லுங்கள்! யார்பிரிய யார்வர யார்வினவ யார்செப்ப நீருரைசெய் நீர்மையில் சூளென்றி நேரிழாய்! கயவாய நெய்தலலர் கமழ்முகை மணநகை - நயவரு நறவிதழ் மதருண்கண் வாணுதல் 75