பக்கம்:பர்மாவில் பெரியார்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

பர்மாவில் பெரியார்

"அம்பேத்காரைப் பார்த்த பிறகு தான் முடிவு செய்யவேண்டும்."

"அய்யா எங்கே தங்கப் போகிறீர்கள்?"

"அம்பேத்காரைப் பார்த்த பிறகு தான் தெரியும்"

"சரி, தற்சமயம் எங்கள் வீட்டுக்கு வருகிறீர்களா?"

"வருகிறேன்" என்றார் பெரியார்.

எனக்குப் பெரு மகிழ்ச்சி ஏற்பட்டது.

வந்தது வீண் போகவில்லை.

பெரியார் தி மு க வரவேற்பை ஏற்றுக் கொள்ள ஒப்புக் கொண்டுவிட்டார். பெருந்தன்மைக்கு இலக்கணமாகி விட்டார்.

இனி, கழகத் தோழர்கள் இடையே வெற்றிப் பெருமிதத்தோடு பேசமுடியும்.

அதிகாரிகளின் சோதனைகள் - வழக்கமான சடங்குகள் ஆகியவற்றைப் பெரியார் பார்க்கட்டும் என விட்டுவிட்டு அதே கப்பலில் இரங்கூனுக்கு வந்த என் மனைவியிருக்கும் பகுதி எதுவென்று தேடிக்கொண்டு புறப்பட்டேன்.

அங்கேயும் அதிகாரிகள் பயணிகளின் பயனச் சீட்டுகளைச் (Passports) சரிபார்த்துக் கொண்டிருந்தார்கள்.

என் உறவினர் ஒருவரோடு வந்திருந்த மனைவியைச் சந்தித்தேன்.

"கப்பலில் கூட்டிக்கொண்டு வந்தீர்கள், வீட்டுக்கும் நீங்களே கூட்டிக்கொண்டுவந்து விட்டுவிடுங்கள். நான் பெரியாரை அழைத்துக்கொண்டு செல்கிறேன்" என்று