22
பர்மாவில் பெரியார்
பர்மா மார்வாரி சங்கம்
பர்மா முஸ்லிம் லீக்
பெங்காளி சங்கம்
ஜெயின் சங்கம்
ஆந்திரர் சங்கம்
மலையாளிகள் சங்கம்
நாடார் சங்கம்
சோழியா முஸ்லிம் சங்கம்
ஒட்டல் தொழிலாளர் சங்கம்
இரங்கூனில் இருந்த எல்லா இந்தியத் தலைவர்களும், பெரியாரை வந்துசந்தித்துச் சென்றார்கள்.
முந்தியநாள் வரை யாருக்கும் தெரியாதிருந்த என் வீடு, ஒரே நாளில் இந்திய இனத் தலைவர்கள் அத்தனை பேரும் தேடிவந்து கூடும் இடமாக மாறிவிட்டது.
மூன்றுமணி வரை பெரியார் வந்தவர்களிடமெல்லாம் முகமலர்ச்சியோடு பேசிக்கொண்டிருந்தார். சற்று ஒய்வெடுத்தால் தேவலை என்று கூறவே, கீழே இருந்த கழகத் தோழர்களிடம், மேற்கொண்டு யாரையும் உள்ளே அனுமதிக்கவேண்டாம் என்று கூறி, உணவு விடுதியிலிருந்து வந்த சாப்பாட்டை எடுத்து என் மனைவி பரிமாற அனைவரும் உணவு உண்டோம்.
சுமார் இரண்டு மணிநேரம் தூங்கியபிறகு பெரியார் கண் விழித்தார்.
என் மனைவி கொண்டு வந்திருந்த சீடை, முறுக்கு, அதிரசம், பிஸ்கட் ஆகியவற்றுடன் காப்பியருந்தினோம்.
பெரியார் என்னை அருகில் அழைத்தார்.