பக்கம்:பர்மாவில் பெரியார்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரங்கூன் வருகை

23

எனக்கு இரத்த அழுத்தம் இருக்கிறது. மருத்துவர்கள் மாடிப்படி ஏறக்கூடாதென்று கூறியிருக்கிறார்கள். காலையில் நம் தோழர்கள் கொடுத்த வரவேற்பில் என்னை மறந்து உற்சாகமாக மூன்றுமாடி ஏறி வந்துவிட்டேன். எனக்குத் துன்பமே உண்டாகவில்லை. ஆனால் தொடர்ந்து நான் மாடியில் ஏறிவரமுடியாது.இங்கே இந்தப்பெண் (என் மனைவியைக் காட்டி) ஓடி ஓடி எங்கள் தேவைகளைக் கவனித்துக் கொள்கிறாள். சிறிதுகூடக் குறைவைக்கவில்லை. இருந்தாலும் கீழ் வீடாக ஒன்று ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார்.

"உடனே ஏற்பாடு செய்கிறேன்" என்றேன்.

கழகத் தோழர்கள் உதயணன், கன்னையா, மதியழகன், தமிழரசன் ஆகியோர் அங்கே இருந்தார்கள்.

"அய்யாவுக்குக் கீழ் வீடாக ஒன்று ஏற்பாடு செய்யவேண்டுமே" என்றேன்.

"உடனே ஏற்பாடு செய்து கொண்டுவருகிறோம்" என்று அவர்கள் புறப்பட்டார்கள்.

வீடு ஏற்பாடு செய்யச் சென்ற தோழர்கள் இன்னும் திரும்பவில்லை.

நான்கு தோழர்கள் வந்தார்கள். "பெரியார் தங்குவதற்காக நாங்கள் வசதியான ஒரு வீடு பிடித்திருக்கிறோம். உடனே அவரை அங்கே அழைத்துச் செல்லலாம்" என்றார்கள்.

பெரியாருக்கு வரவேற்புக் கொடுக்கக் கூடாதென்று பொதுக்குழுவில் எதிர்ப்புத் தெரிவித்த அந்தத் தோழர்கள் இவ்வளவு ஆர்வமாகப் பெரியாருக்கு வீடு ஏற்பாடு செய்தது வியப்பாய் இருந்தது.