பக்கம்:பர்மாவில் பெரியார்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

பர்மாவில் பெரியார்


இன்றைக்கே இரயிலுக்கு டிக்கெட் வாங்கிவிடு.

அந்தத்தோழர் தயங்கினார். " அய்யா ரயில் பயணம் கடுமையாய் இருக்கும் நாளை மறுநாள் மாலை பிளேனுக்கு ஒரு டிக்கெட் இருப்பதாகச் சொன்னான். அதில் நீங்கள் போய்விடலாம். நாளைக் காலையில் புறப்படும் இரயிலில் இவர்கள் இருவரும் புறப்பட்டு வரட்டும்."

தோழர் ராஜாராமும் மணியம்மையாரும், அந்தத் தோழருடைய கருத்தை ஆதரித்துப் பெரியாரை வற்புறுத்தவே, பெரியார் அந்த ஏற்பாட்டுக்கு ஒப்புக்கொண்டார்.

மறுநாள் காலை ரயிலில் மணியம்மையாரும், ராஜாராமும் புறப்பட்டுச் செல்லப் பெரியார், அந்த ஆதிதிராவிட தோழர்களுடன் மோல்மேனில் தங்கினார்.

ஏழைகளான அந்தத்தோழர்களும் அவர்களைச் சேர்ந்தவர்களும், தங்களால் முடிந்த அளவுக்குப் 'பெரியாருக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்து, மணியம்மையார் கூட இல்லாத குறை தெரியாதவாறு செய்தார்கள்.

பெரியாருடைய பழக்கவழக்கங்களும், எந்தச் சூழ்நிலைக்கும் ஒத்துப்போகக்கூடிய தன்மையை இயற்கையாகவே அவருக்கு ஏற்படுத்தியிருந்தன.

ஆசார அனுஷ்டானங்களைப் பற்றிக் கவலைப்படாத நாத்திகர் ஒருவரால் தான், சூழலுக்குத் தகுந்தபடி சமாளித்துக்கொள்ளமுடியும்.

பெரியார் நாள்தோறும் குளிப்பதில்லை. இதில் என்ன வசதியென்றால், குளியலறை, வெந்நீர், சோப்பு போன்றவற்றைத் தேடிக்கொண்டிருக்கவேண்டியதில்லை.