பக்கம்:பர்மாவில் பெரியார்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தமிழர் தலைவர்

அருள் பொலியும் திருமுகத்தான்
அன்பு நிறை நெஞ்சத்தான்
இருள் விலகப் பணிபுரியும்
இனியத்தவம் இயற்றுகின்றான்!

தமிழரெலாம் தலைநிமிர்ந்து
தன்மஈனம் மிக்கவராய்
வாழ்வதற்குக் காரணாைய்
வந்துதித்த பெருந்தலைவன்!

கண்மூடிப் பழக்கமெல்லாம்
மண்மூடிப் போவதற்கே
எண்ணியெண்ணிச் செயலாற்றும்
இதயமுள்ள மாமனிதன்!

தீதுக்குக் காரணமாம்
தெய்வ மத சாத்திரத்தை
வாதிட்டே யொழி சிக்கவநதி
வண்டமிழர் தலைவனிவன்!

ஈரோட்டுத் தாத்தா

வாடும்நாள், வாழும் வகையினை அறிஞர்
தேடும்நாள் அறிஞரைத்தோற்றுதற்கென்று.

தமிழறம் பேணும் தகைமையாளர் !
அமைதியாய்ச் சிந்தித்தறியும் மாண்பினர்!

வள்ளுவர் நெறியை வாழ்க்கையிற் காட்டும்
தெள்ளிய உள்ளச் செவ்வியுடையார்!

உளம்சொல் உடலால் உவப்புறும் பணியை
இளமைப் பொழுதிலும் வளர்தமிழ் நாட்டுக்கு

அளித்த வள்ளல்!அஞ்சாச் சிங்கம் !
உழைப்பின் பயனை விழையாச் செல்வன்!

சிந்தனைச் சிற்பி! திராவிடத்தந்தை!
வந்தனைக்குரிய வடிவிற் பிறந்தார்!

ஈரோட்டுத்தாத்தா!தமிழர் பாராட்டும் பெரியார் இராமசாமியே !