பக்கம்:பறவைகளைப் பார்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தோடிவிடும்; ஆனால் நீங்கள் பொறுமையிழக்கக் கூடாது. (பறவைகளைக் கவனிப்பதற்குப் பொறுமை மிகமிகத் தேவை) பொறுமையோடிருந்தால் அந்தக் குருவி மற்ற குருவிகளோடு வேகமாக வந்து இரையைப் பொறுக்க தொடங்குத்வதைக் காணலாம்,

ஒரு தேங்காயை இரண்டாக உடைத்து ஒவ்வொரு மூடியின் மேற்புறத்திலும் துளைகள் செய்து படத்தில் காட்டியவாறு ஜன்னலுக்கு அருகிலேயே தொங்கவிடலாம். பறவைகளுக்குத் தேங்காய் ஒரு பெரிய விருந்து. பட்டாணிக் குருவிகள் இதை மிகவும் விரும்பி உண்ணும்.

கசாப்புக் கடையிலிருந்து ஒரு பெரிய எலும்பைக் கொண்டு வந்து சுத்தம் செய்து அதிலுள்ள பொந்திலே கொழுப்பையோ, பிசைந்த உருளைக் கிழங்கையோ நிரப்பி ஒரு மாத்தில் தொங்கவிடலாம். அதையும் அடிக்கடி போய்ப் பார்த்து வரலாம். இரை வைப்பதற்கு இரண்டு வகையான மனைப் பலகைகளும் செய்யலாம். பூனை ஏற முடியாத வகையில் குறைந்தது ஒரு மீட்டர் உயரமுள்ள ஒரு கம்பத்தில் பலகையைப் பொருத்தி,