பக்கம்:பறவை தந்த பரிசு-1.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
60


"அத்தான், அடித்ததும் நீங்கள்-விசாரிப்பதும் நீங்கள் -நான் என்ன சொல்லுவேன். இவ்வளவு அன்பாக இருக்கும் நீங்கள் அந்த நேசத்தில் மட்டும் ஏன் அப்படி மாறிவிடுகிறீர்கள். என்றாவது ஒரு நாள் நீங்கள் அடிக்கும்போது நான் இறந்துபோகத்தான் போகிறேன். அப்போதுதான் எனக்கு அமைதி கிடைக்கும்" என்றாள்.

கந்தசாமி கண் கலங்கினான், அவன் பொன்னியின் மீது உயிரையே வைத்திருந்தான். குடி தான் அவனைக் கொடுமைக்காரனாக்கி விட்டது,

இனிமேல் குடிப்பதில்லை என்று முடிவு செய்தான் .

"பொன்னி, முருகன் மீது ஆனை! நான் இனிக் குடிக்க மாட்டேன்! உன்னைப் பொன் போல் வைத்துக் காப்பாற்றுவேன்" என்றான்.

பொன்னி மிக மகிழ்ச்சியடைந்தாள். தன்னை வாழ வைத்த தெய்வம முருகனை வணங்கினாள். வழிகாட்டிய மயிலை நினைத்து நன்றி சொன்னாள்.

மாப்பிள்ளை குடியை விட்டு விட்டார் என்ற செய்தி கேட்டு கண்ணனும் வள்ளியும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. . மறுநாளே மலைக் கோயிலுக்குச் சென்று முருகனுக்கு அபிடேகம் செய்தார்கள. வழியில் பார்த்த மயிலை விழுந்து விழுந்து கும்பிட்டார்கள்.

பாலப்பட்டிப் பண்ணையார், பொன்னியால் தான் தன் மகன் திருந்தினான் என்று கூறி அளவில்லா மகிழ்ச்சியடைந்தார்.