பக்கம்:பறவை தந்த பரிசு-2.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

49

பேசும் குரல் மிக அருகிலேயே கேட்டாலும் யாரையும் காணவில்லை. “யார் என்னைக் கூப்பிடுவது' எதிரில் வாருங்கள்?” என்று கண்ணன் கூக்குரலிட்டான்.

உடனே அவன் எதிரில் பறந்து வந்து நின்றது கோயில் மயில்.

வியப்புடன் “நீயா என்னைக் கூப்பிட்டாய்?” என்று கேட்டான் கண்ணன்.

“ஆம் நான்தான் உன்னை அழைத்தேன். உன் நன்மைக்காக உன்னிடம் பேசவே உன்னை அழைத்தேன்” என்று அந்த மயில் கூறியது. அந்த மயில் பார்க்க அழகாயிருந்தது. அது பேசியது வியப்பாய்இருந்தது. ஆனால் அதுசொன்னகருத்தைத் தான் கண்ணனால் நம்ப முடியவில்லை. மலையடி வாரத்தில் வாழும் ஒருசின்ன மயில் தனக்கு என்ன நன்மை செய்து விட முடியும் என்று அவன் நினைத்தான்.

“கண்ணா, ஐயப்படாதே. நீ அடிக்கடி கோயிலுக்கு வருவதையும், ஆண்டவனை வேண்டு வதையும் நான்பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். உன் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று உனக்கு வழி சொல்லவே நான் விரும்புகிறேன்” என்றது அந்த மயில்.